தமிழகம்

ராகவா லாரன்ஸ் எனக்குத் தெரியும்.. மோசடியில் ஈடுபட்ட நபர் சிக்கியது எப்படி?

தனக்கு ராகவா லாரன்ஸ் தெரியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் வீரராகவன். இவர் கடந்த நவம்பர் 4ஆம் தேதி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்தப் புகாரில் “அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டார். அப்போது, ‘நான் நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர். ராகவா லாரன்ஸின் அறக்கட்டளையில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுக்கிறோம்.

அதற்காக 8 ஆயிரத்து 675 ரூபாய்பணத்தை அனுப்புங்கள்’ எனக் கூறினார். இதனையடுத்து ‘இந்தப் பணம் எதற்கு? எனக் கேட்டபோது, ‘எங்களின் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் இந்தத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

பின்னர், இதனை நம்பி போன் பே மூலம் அவர் கூறிய பணத்தை அனுப்பினேன். இதனையடுத்து மீண்டும் என்னை தொடர்பு கொண்டு அந்த நபர், ‘ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனத்தில் உங்களுக்கு வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். அதற்காக மேலும் 2 ஆயிரத்து 875 ரூபாய் அனுப்புங்கள் எனக் கூறினார். அதனையும் நம்பிய நான், மீண்டும் பணத்தை அனுப்பினேன்.

பின் எனக்கான வங்கிக் கணக்கு துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் என்னைத் தொடர்பு கொண்ட அவர், ‘50 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தால் உங்கள் குழந்தையின் மொத்த படிப்புச் செலவையும் எங்களின் தொண்டு நிறுவனமே பார்த்துக் கொள்ளும்’ எனக் கூறினார்.

மீண்டும் அதனையும் நம்பிய நான் மேலும் 50 ஆயிரம் பணத்தைச் செலுத்தினேன்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து அந்த நபர் பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த வீரராகவன், எழும்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து உடனடியாக புகார் அளித்துள்ளார்.

இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த எழும்பூர் போலீசார், அந்த நபரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த நபர் வேலூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அங்கு சென்ற போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவனுக்கு மது வாங்கி கொடுத்த 8ஆம் வகுப்பு மாணவன்… கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்!

இந்த விசாரணையில், அந்த மர்ம நபர் வேலூரைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, எதற்காக இப்படிச் செய்தார்? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

40 minutes ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

44 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

1 hour ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

1 hour ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

2 hours ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

2 hours ago

This website uses cookies.