தமிழகம்

ராகவா லாரன்ஸ் எனக்குத் தெரியும்.. மோசடியில் ஈடுபட்ட நபர் சிக்கியது எப்படி?

தனக்கு ராகவா லாரன்ஸ் தெரியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை எழும்பூரைச் சேர்ந்தவர் வீரராகவன். இவர் கடந்த நவம்பர் 4ஆம் தேதி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்தப் புகாரில் “அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டார். அப்போது, ‘நான் நடிகர் ராகவா லாரன்ஸின் உதவியாளர். ராகவா லாரன்ஸின் அறக்கட்டளையில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுக்கிறோம்.

அதற்காக 8 ஆயிரத்து 675 ரூபாய்பணத்தை அனுப்புங்கள்’ எனக் கூறினார். இதனையடுத்து ‘இந்தப் பணம் எதற்கு? எனக் கேட்டபோது, ‘எங்களின் தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் இந்தத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

பின்னர், இதனை நம்பி போன் பே மூலம் அவர் கூறிய பணத்தை அனுப்பினேன். இதனையடுத்து மீண்டும் என்னை தொடர்பு கொண்டு அந்த நபர், ‘ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனத்தில் உங்களுக்கு வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். அதற்காக மேலும் 2 ஆயிரத்து 875 ரூபாய் அனுப்புங்கள் எனக் கூறினார். அதனையும் நம்பிய நான், மீண்டும் பணத்தை அனுப்பினேன்.

பின் எனக்கான வங்கிக் கணக்கு துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் என்னைத் தொடர்பு கொண்ட அவர், ‘50 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தால் உங்கள் குழந்தையின் மொத்த படிப்புச் செலவையும் எங்களின் தொண்டு நிறுவனமே பார்த்துக் கொள்ளும்’ எனக் கூறினார்.

மீண்டும் அதனையும் நம்பிய நான் மேலும் 50 ஆயிரம் பணத்தைச் செலுத்தினேன்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து அந்த நபர் பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த வீரராகவன், எழும்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து உடனடியாக புகார் அளித்துள்ளார்.

இதன் பேரில் வழக்குப் பதிவு செய்த எழும்பூர் போலீசார், அந்த நபரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த நபர் வேலூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர் அங்கு சென்ற போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவனுக்கு மது வாங்கி கொடுத்த 8ஆம் வகுப்பு மாணவன்… கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்கள்!

இந்த விசாரணையில், அந்த மர்ம நபர் வேலூரைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, எதற்காக இப்படிச் செய்தார்? இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட கோணங்களில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.