வேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொறியியல் கல்லூரி மாணவனை பளார் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் அரைந்ததால் வாயில் ரத்தம் கொட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும் பயிலும் மாணவர்கள் தினேஷ் மற்றும் சூர்யா. இவர்கள் இருவரும் கல்லூரி முடிந்து ஒரே இருசக்கர வாகனத்தில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மேம்பாலத்தின் கீழே வந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், மாணவர்களை மிரட்டி அவர்களுக்கு ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். இதனால், அதிர்ந்து போன மாணவர்கள், “தங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளது, தலைக்கவசம் அணிந்துள்ளோம் பிறகு ஏன் அபராதம் விதித்துள்ளீர்கள்..?” என கேட்டதற்கு, ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மாணவர் தினேஷின் கண்ணத்தில் ஓங்கி பளார் என அரைந்துவிட்டு, அவரது செல்போனை பிடுங்கி கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து மாணவனின் உறவினர்களும், பெற்றோர்களும், சக மாணவர்கள் காவல்துறையினரின் அராஜகத்தின் உச்சத்தை கண்டித்து மாணவனை தாக்கிய காவல் ஆய்வாளர் ராமச்சந்திரனை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் இந்த நிகழ்வு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அராஜக போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் செய்வதரியாது திகைத்து நின்றார்.
மேலும், பொதுமக்கள் திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் காவல்துறையின் அராஜகம் அதிகரித்து கொண்டு செல்வதாக கூறி வேதனையடைந்து சென்றனர். மாணவர் தினேஷும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ராமச்சந்திரன் தாக்கியதில் பல் ஒன்று ஆடியதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றார் .
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.