ஒரிசாவில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை குடியாத்தத்தில் பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த குடியாத்தம் போலீசார் அவ்வழியாக வந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். பின்னர், அவர்கள் கொண்டு வந்த 3 பேக்கினை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 23 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு 2.50 லட்சம் ஆகும்
அவர்களை தீவிர விசாரணையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது காலித் (32), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக் (31) என்பது தெரியவந்தது. இருவரும் ஒரிசாவில் கஞ்சா வாங்கிக்கொண்டு ரயில் மூலம் திருப்பூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. ரயில் குடியாத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: உலகரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவு… ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு ; மத்திய அரசுக்கு சீமான் விடுத்த கோரிக்கை..!!!
சோதனை மேற்கொள்வதை கண்ட முகமது காலித் மற்றும் அபிஷேக் இருவரும் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இறங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்த குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து ரயில் மூலம் ஒரிசாவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா வருவது தொடர் கதையாகவே இருப்பதாகவும், இதனை தமிழக அரசு தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து கஞ்சா மற்றும் குட்கா வேலூர் மாவட்டத்தில் அதிக அளவு போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதாகவும், மற்ற மாநிலத்தில் உள்ள போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை எனவும் பொதுமக்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.