வேலூர் ; பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காத ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைக்க சுத்தியுடன் வந்த பெண்ணால் ஒடுக்கத்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் பகுதியில் இருந்து இரவு 7 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றுக்கொண்டு ஒடுக்கத்தூர் நோக்கி புறப்பட்டது. பின்னர், இரவு 8.30 மணி அளவில் ஒடுகத்தூர் பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்து கொண்டு இருந்தது. அப்போது பேருந்து நிலையம் திரும்ப வளைவில் அரசு பேருந்து நிற்கவில்லையாம். இதனால், அந்த பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் ஏன் வளைவில் பேருந்து நிற்கவில்லை.
நான் அங்குதான் இறங்க வேண்டும் என்று நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடம் நடத்துனர் அங்கு பேருந்து நிறுத்தம் கிடையாது. நான்கு மணி சந்திப்பில் தான் நிற்கும் என்று எடுத்துக் கூறினார். ஆனால், அதை எதையுமே காதில் வாங்காத, அந்த பெண் நாங்களும் ரவுடிதான் பாணியில் திடீரென கையில் சுத்தியுடன் வந்து அதெல்லாம் எனக்கு தெரியாது.
நீங்கள் சம்பளம் வாங்குறீங்க இல்ல, எனக்கு அந்த இடத்தில் தான். இறங்கனும் எப்படி வேறு இடத்தில் இறக்கிவிடலாம், என்று கூறியபடி பேருந்து கண்ணாடியை உடைப்பது போல் ஆபாசமாக பேசினார்.
ஆனாலும், அந்த பெண்ணிடம் எவ்வளவு கூறியும், அவரின் கோபம் அடங்கவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கி விட்டனர். இதனை கவனித்த அந்த பெண் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவத்தால் அங்கு நீண்ட வரிசையில் பேருந்து வேன் போன்ற வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.