தமிழகம்

திமுக தலைமை என்ன முடிவெடுத்தாலும்.. கூட்டணி முடிவு? வேல்முருகன் திடுக் பேச்சு!

தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில் தான் உள்ளது என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரை: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த வெற்றிக்குமரன், கட்சியில் இருந்து விலகிய நிலையில், மதுரையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில் தான் உள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போது உள்ள சூழ்நிலையைப் பொறுத்து, கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும். நான் சட்டப்பேரவையில் எடுத்து முன்வைக்கின்ற, தமிழர் உரிமை, தமிழ் மண் சார்ந்த கோரிக்கை குறித்து, திமுக தலைமைக்கு சங்கடம் ஏற்பட்டிருந்தால், திமுக தலைமை என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

எனவே, சட்டப்பேரவையில் எனது தமிழ் மண், தமிழர் உரிமை தொடர்பான கோரிக்கை பேச்சு தொடரும். நான் தற்போது மட்டுமில்லை, பல ஆண்டுகளாக. சட்டப்பேரவையில் பல கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளேன். தமிழ், தமிழ் மண், முல்லைப் பெரியாறு அணை, மேகதாது உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் பேசி, பல சட்டங்கள் கொண்டு வரவும் காரணமாக இருந்துள்ளேன்.

மருதமலைக் கோயிலில் குடமுழுக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என ஏற்கனவே கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி சட்டப்பேரவையில் மனு கொடுத்துள்ளேன். அமைச்சர் சேகர்பாபுவிடமும் இது சம்பந்தமாக வலியுறுத்தியுள்ளேன். ஆனால், சட்டப்பேரவையில் திமுக அமைச்சர் சேகர் பாபு, அதிமுக உதயகுமார் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் என்னைப் பேச விடாமல் தடுத்தனர்” என்றார்.

இதையும் படிங்க: சுரேஷுக்காக சுந்தரி போட்ட ப்ளான்.. கள்ளத்தொடர்புக்கு இடையூறு செய்த கள்ள உறவு.. என்ன நடந்தது?

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது வேல்முருகன் – சபாநாயகர் அப்பாவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசாரமான வாதம் பறந்தது. அப்போது, அதிகப்பிரசங்கித்தனம் என ஸ்டாலின் வேல்முருகனை விமர்சித்தது கூட்டணியில் கவனம் பெற்றது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.