கால்நடை துறையில் வேலை வாங்கி தருவதாக 3 பேரிடம் தலா 50 ஆயிரம் பணம் பெற்று ஏமாற்றியதாக கால்நடை துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் 5 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் சாந்தி. இவர், தற்போது குடியாத்தம் கல்லூர் கால்நடை மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், சாந்தி கடந்த 2019-ம் ஆண்டு மாச்சனூர் கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன், இவரது சகோதரர் பிரபுதேவா மற்றும் ராகவேந்திரன் ஆகிய 3 பேரிடமும், கால்நடை துறையில் பணியிடம் காலியாக இருப்பதாகவும், 4 லட்சம் கொடுத்தால் டாக்டர்.ரமேஷ் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடமும் தலா 50 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.
ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை என்றும், பணமும் திரும்ப தரவில்லை என்றும் கூறி சிவசந்திரன் உட்பட 5 பேர் இன்று வேலூரில் உள்ள கால்நடைத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் மற்றும் கால்நடை துறை உதவி இயக்குனர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 பேரும் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில், கால்நடை மருத்துவமனையில் உதவியாளர் சாந்தி மீது புகார் அளிக்க சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.