தமிழகம்

ஆவின் பாலில் தண்ணீர் கலந்த வீடியோ… தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மறுப்பு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் செயல்படும் ஆவின் பால் தொகுப்பு குளிா்விப்பான் மையத்துக்கு கடந்த மாா்ச் 15-ஆம் தேதி லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட பாலில் லாரி ஓட்டுநா் தண்ணீா் கலப்பதாக ஆவின் விரிவாக்க அலுவலா் ஜான் ஜஸ்டின் தேவசகாயம் விடியோ பதிவு செய்து மதுரை ஆவின் நிர்வாக பொது மேலாளரிடம் புகார் அளித்திருந்தார்

அதனைத்தொடர்ந்து ஆவின் நிர்வாகம் அன்றைய தினமே சம்பந்தபட்ட வாகன ஓட்டுநரை பணியிலிருந்து நீக்கியதுடன், அவரது வாகனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டது.

கடந்த 2018 முதல் 2020 வரை ஆவின் பொருள்கள் விற்பனை செய்த தொகையை ஆவினில் செலுத்தாமல் ஜான் ஜஸ்டின் கைவசம் வைத்துக்கொண்டதாக கூறப்படும் நிலையில் அவரது மாத சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யும்படி பொது மேலாளா் உத்தரவிட்டார்.

இதன் காரணத்தால், கடந்த 4 மாதங்களுக்கு முன்னா் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை தற்போது நடந்ததாகவும், ஆவினில் முறைகேடுகள் நிகழ்வதாகவும் ஜான் ஜஸ்டின் பொய்யான தகவல்களை ஊடகங்களில் பரப்பி வருவதாக அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் ஆவினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஜான் ஜஸ்டின் விடியோ வெளியிட்டதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆவின் புது மேலாளர் இடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி பழனியப்பன் என்பவர் கூறுகையில்,” ஆவின் பாலில் தண்ணீர் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் அன்றைய தினமே சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஆவின் நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தவறான வீடியோவை வெளியிட்ட ஜான் ஜஸ்டின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.