விருதுநகர் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் பணி ஆணை வழங்குவதற்கு லஞ்சம் பெறுவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் நேற்று இரவு ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமா சங்கரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 6 லட்சத்து 68 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை சூலக்கரை மேடு திருமலை மன்னர் நகர் முதல் தெருவில் உள்ள ஊராட்சிகள் உதவி இயக்குநர்உமாசங்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
உமாசங்கரின் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்திற்கு முறையான கணக்குகள் காட்டவில்லை. இருப்பினும், நேரடியான புகார் இல்லாததால்அவர் கைது செய்யப்படவில்லை. அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யயப்பட உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.