வாரிசு படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகர் விஜய் ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாடியுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகை தினங்களில் நடிகர் விஜய் திரைப்படம் வெளியாகும் பொழுது, அவரது ரசிகர்கள் முதியோர் மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் காலை உணவு மற்றும் மதிய உணவு கொடுத்து அவர்களோடு கூட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக இன்று வெளியான வாரிசு திரைப்படத்தையொட்டியும், பொங்கல் திருநாளையொட்டியும், திருச்சி புதூரில் உள்ள சாந்தி அமைதி முதியோர் இல்லத்தில் ராஜா தலைமையில் “வாரிசு பொங்கல்” கொண்டாடப்பட்டது.
முதியோர் இல்லத்தில் பொங்கல் வைத்து முதியோர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. முன்னதாக, அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு இலவச சேலைகள் வழங்கி வாரிசு பொங்கல் மகிழ்ச்சி அங்கு பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விஜய் ரசிகர்கள் பவுல் சரண்ராஜ், நடராஜன், பிரகாஷ், நசீர், தொட்டி ஹரிகரன், மனச்சநல்லூர் சுரேஷ், புத்தூர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.