கன்னியாகுமரி: நாகர்கோவிலில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் திரை கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் கார்த்திகை , ஸ்ரீ வள்ளி திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இதில் திருவனந்தபுரம் செல்லும் சாலையில் உள்ள வசந்தம் பேலஸ் என்னும் திரையரங்கில் திரைப்படம் துவங்கும் முன்னர் ரசிகர்களின் ஆர்வமிகுதியால் பல்வேறு கொண்டாட்டங்களில் திரை முன்பு ஈடுபட்டனர் .
உற்சாகத்தில் உச்சமாக ஆடிங்கொண்டிருந்த ரசிகர்கள் திரையின் மேல் விழுந்தனர். இதில் திரை கிழிந்தது. பின்னர் படம் முழுவதும் ஓடிய பின்னர் திரை சரி செய்யப்பட்டு காட்சிகள் நடந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, விஷமிகள் சிலர் ரசிகர்கள் போர்வையில் திரையரங்கில் நுழைந்து திரையை கிழித்து இருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக தெரிவித்தனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.