தவெக மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இன்று அதன் தலைவர் விஜய், கட்சி அலுவலகத்தில் விருந்து வைத்தார்.
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள விஜய், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலை கிராமத்தில் தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்தினர். இந்த மாநாடு கிட்டத்தட்ட 85 ஏக்கர் நிலத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இவ்வாறு மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களை கெளரவிக்கும் விதமாக, அவர்களை நேரில் வரவழைத்து விருந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதற்காக, இன்று பிற்பகல், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு விஜய் வந்தார். பின்னர், அங்கு நின்று கொண்டிருந்த தொண்டர்களுக்கு கை அசைத்த விஜய், பின்னர் உள்ளே சென்றார்.
அங்கு, நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து, தானே உணவு பரிமாறினார். பின்னர், சில நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு தங்க மோதிரத்தை விஜய் பரிசாக அளித்து உள்ளார். மேலும், இந்த நிகழ்வில் 47 விவசாயிகள் கெளரவிக்கப்பட்டதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, விஜயிடன் தங்க மோதிரத்தை பரிசாகப் பெற்ற பந்தல் அமைப்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களின் பாதுகாப்பே தலைவருக்கு (விஜய்) முக்கியமானது. அதற்காகவே அவர் என்னை மிகவும் கேட்டுக் கொண்டார். மாநாட்டுத் திடல் அமைக்கும்போது தினமும் வீடியோக்களை நாங்கள் விஜய்க்கு அனுப்புவோம். அவர், அதில் குறை நிறைகளைக் கூறுவார். அதனை நாங்கள் சரிசெய்வோம். என்னுடைய பணி அவருக்கு பிடித்திருந்ததாகக் கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதையும் படிங்க: 4 வருஷமா எங்களுக்குள்ள ஒன்னுமில்ல.. சந்தையில் புடவையில் கணவர்.. அதிர்ந்த மனைவி
இப்போது என்னிடம் சுமார் 10 நிமிடங்கள் விஜய் பேசி இருப்பார். அதுவே எனக்கு போதும். மோதிரம் கொடுப்பதாக எங்களிடம் அவர்கள் கூறவில்லை. உங்களைப் பார்க்க வேண்டும், கட்சி அலுவலகம் வாருங்கள் என்று தான் அழைப்பு வந்தது. எனவே, நாங்கள் குடும்பத்துடன் வந்தோம்” எனக் கூறினார். தொடர்ந்து, விஜய் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.