திருச்சியில் இருந்து இன்று த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கினார். டிசம்பர் மாதம் வரை, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், குறிப்பிட்ட இடைவெளியில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
இதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து தனியார் விமானம் மூலம் திருச்சிக்கு வந்த விஜயை, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே அவர் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
விஜய் வருகை புரியும் வழியெங்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பிரசார வாகனம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் விஜய் பேசுவதில் சிக்கலும் எழுந்தது.
எனினும், மக்கள் கூட்டத்தைக் கண்டு கையசைத்தபடி, உற்சாகத்துடன் விஜய் முன்னேறினார். திருச்சி மரக்கடை பகுதியில் இன்று காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை அவருக்கு உரையாற்ற போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.இதனால் விஜய் குறிப்பிட்ட நேரத்தில் பேச முடியாமல் தாமதாமாகியுள்ளதால், அவர் பேசும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.