தமிழகம்

விஜய் பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை… நாளை திட்டமிட்டபடி நடைபெறுமா? பரபரப்பை கிளப்பிய தவகெ பிரமுகர்!

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல்குமார் நாளை திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ள இருக்கும் பிரச்சார பயணத்தை குறித்து செய்தியாளர்களுக்கு அளித்து பேட்டியில் திருச்சி துவங்கி அரியலூர், பெரம்பலூர் பரப்புரை நடைபெறுகிறது.

12 நாட்கள் இங்கு முகாமிட்டு நிர்வாகிகள் அனுமதி வாங்கி உள்ளனர். இன்று தான் பெரம்பலூர், அரியலூர் அனுமதி கிடைத்துள்ளது.

23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இது வரை இது போன்ற சுற்று பயணத்திற்கும் எந்த கட்சிக்கும் இப்படி நிபந்தனை விதிக்கப்பட்டதில்லை.

கர்ப்பிணி பெண்கள், பள்ளி மாணவர்கள் குழந்தைகள் கலந்து கொள்ள வேண்டாம் என பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

குச்சி, கம்பு, ஆயுதங்கள் வைத்திருக்ககூடாது என்று தெரிவித்துள்ளனர். கட்சிக்கொடி வைத்திருந்தாலும் அது கம்பு தான் இது போன்ற நிபந்தனைகள் எந்த கட்சிக்கும் போட்டதில்லை.

இதில் எந்த விதிமுறை மீறப்பட்டால் எந்த நேரத்திலும் இந்த பயணம் நிறுத்தப்படும் காவல்துறை நிபந்தனையில் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் பிரச்சார பயணத்திற்கு எல்லாவித முட்டுக்கட்டைகளையும் அரசு போடுகிறது. திமுகவின் ஆதரவோடு பாஜகவின் கூட்டணியான அதிமுக கூட்டங்கள் நடக்கிறது. எல்லாவித நிபந்தனைகளையும் கட்சியினர் கடைபிடிக்க வேண்டும்பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கடுமையான நிபந்தனைகள் காவல்துறை கொடுத்துள்ளனர் ஏன் நீங்கள் நீதிமன்றம் செல்லவில்லை என்ற கேள்விக்கு? ஒரு நாள் பயணத்திற்காக 12 நாள் போராடி உள்ளோம்.

பெரும்பாலான இடங்களில் அதிமுகவுக்கு எந்த நிபந்தனைகளும் கொடுக்கவில்லை திமுக அரசு முழு ஆதரவு கொடுத்துள்ளது. பொதுச் செயலாளர் போகும்போது பத்து நபர் மட்டுமே உடன் சென்றனர். மாநகர ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் அனுமதி கிடைத்ததால் அங்கு சென்றோம். இதற்கு வழக்கு கொடுத்துள்ளனர். காவல்துறை கொடுத்த கேள்வியில் நம் யுனிவர்சிட்டி தேர்வை எழுதிவிடலாம்.

பேனர் வைப்பதற்கு ஏன் உங்களுக்கு காவல் துறை அனுமதி தரவில்லை? மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் எங்கள் தலைவர் என்பதால்.

தலைவர் ஆட்சி அமைய வேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள் 2026 பெரிய மாற்றம் உண்டாகும். எந்த இடத்திலும் சட்டம் மீறப்பட்டதில்லை.

ஏன் சனிக்கிழமை மட்டும் இந்த பிரச்சார பயணம் என்ற கேள்வி என்பதே என்ற கேள்விக்கு? வாரத்திற்கு ஒரு நாள் சென்றபோது 12 நாட்கள் போராடி அனுமதி பெற்று இருக்கிறோம் இந்த தினந்தோறும் என்றால் எப்படி என்ன சொல்ல முடியும்.

திருச்சி தேர்வு செய்தது ஏன்? திருச்சி வரலாறு படைத்த பகுதி என்பதால் திருச்சியில் இந்த பிரச்சார பயணத்தை துவக்குகிறோம் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.