KGF தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படத்தில் கைகோர்க்கும் விக்ரம் பட நடிகர்..! ஹீரோயின் யார் தெரியுமா..? சுட சுட வெளியான தகவல்..!

பிரசாந்த் நீல் இயக்கிய கே.ஜி.எஃப் மற்றும் பிரபாஸின் சலார் போன்ற படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. அந்நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான கே.ஜி.எஃப் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து அதைவிட பிரம்மாண்டமாக அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளிட்டு வெற்றிகண்டனர். விரைவில் கே.ஜி.எஃப் 3-ம் பாகத்தையும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பிரபாஸின் சலார் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கே.ஜி.எஃப் படத்தில் பணியாற்றிய டெக்னிக்கல் டீம் தான் இப்படத்திலும் பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, அந்நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்திற்கு தூமம் என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக சூரரைப்போற்று பட நாயகி அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பவண் குமார் இயக்க உள்ளார். இவர் யு டர்ன், லூசியா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியிட உள்ளனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.