திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 5.05 ஏக்கர் அரசு இடத்தை இஸ்லாமிய அடக்க தளத்திற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் 5.05 ஏக்கர் உள்ளது. இதை முஸ்லிம் அடக்க ஸ்தலமாக மாற்றுவதற்கு வருவாய்த் துறையினரின் பதிவேட்டில் மாற்றப்பட்டுள்ளது.
அதை மீட்டு இலவச வீட்டுமனை, விளையாட்டு மைதானம், ரேஷன் கடை நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கு மீட்டு தரக்கோரி அம்பேத்கர் நகர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், வட்டாச்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில், மனு மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊத்துக்கோட்டை சமுதாயக்கூடம் அருகே வருவாய்த் துறையினரை கண்டித்து அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு தரக்கோரி அம்பேத்கர் கிராம மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் போராட்டத்தை கைவிடக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அறவழி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்தை நிறுத்தி கைது செய்யும் நோக்கத்தோடு காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
This website uses cookies.