திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 5.05 ஏக்கர் அரசு இடத்தை இஸ்லாமிய அடக்க தளத்திற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் 5.05 ஏக்கர் உள்ளது. இதை முஸ்லிம் அடக்க ஸ்தலமாக மாற்றுவதற்கு வருவாய்த் துறையினரின் பதிவேட்டில் மாற்றப்பட்டுள்ளது.
அதை மீட்டு இலவச வீட்டுமனை, விளையாட்டு மைதானம், ரேஷன் கடை நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கு மீட்டு தரக்கோரி அம்பேத்கர் நகர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், வட்டாச்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில், மனு மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊத்துக்கோட்டை சமுதாயக்கூடம் அருகே வருவாய்த் துறையினரை கண்டித்து அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு தரக்கோரி அம்பேத்கர் கிராம மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் போராட்டத்தை கைவிடக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அறவழி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்தை நிறுத்தி கைது செய்யும் நோக்கத்தோடு காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.