மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் அமைந்துள்ள பூம்பாறை கிராமத்தில் இருந்து குண்டு பட்டி, பழம்புத்தூர் செல்லும் முக்கிய சாலைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றன.
சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு முடிய தார் சாலை போட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் உள்ளது. கொடைக்கானலில், உள்ள 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவிலுக்கு கொடைக்கானல் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்களும் மற்றும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் முக்கிய கிராமங்களில் ஒன்று.
மேல்மலையிலிருந்து அவசர காலங்களில் இச்சாலையை தான் இரண்டு கிராமங்களுக்கும் முக்கிய சாலையாக விளங்குகின்றது. சாலையின் வழியில் விவசாயிகள் தங்கள் பயிரிட்ட விலைப் பயிர்களை இவ்வழியாக தான் கொண்டு செல்லும் சூழ்நிலையில் உள்ளன.
மேலும், இக்கிராமத்திற்கு அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை வந்து செல்ல முடியாத பாதையாக மாறிக் கொண்டு வருகிறது. மேலும், இச்சாலையில் 2 முதல் மூன்று அடி பள்ளங்கள் அனேக இடங்களில் காணப்படுகிறது. இரண்டு சக்கர வாகனத்தில், செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் இப்பாதையில், அடிக்கடி கீழே விழுந்து பெருங்காயங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பூம்பாறை ஊராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை கவனத்தில் கொண்டு பல வருடங்களாக பழுதாகி கிடக்கும் சாலையை கவனத்தில் கொண்டு சரி செய்து தர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.