தமிழகம்

குடியால் வாழ்க்கையை தொலைத்த பிரபல கிரிக்கெட் வீரர்…ஏலத்துக்கு வந்த சொத்து..!

வினோத் கம்பளி – புகழின் உச்சத்தில் இருந்து வீழ்ச்சி வரை

இந்திய முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் வினோத் கம்பளி திடீரென உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காய்ச்சலுக்காக மருத்துவமனை சென்ற போது,அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் கட்டி உள்ளதாக கூறியுள்ளனர்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக பல வித நோயால் அவதிப்பட்டு வருகிறார்.ஒரு காலத்தில் இந்திய அணிக்காக அபாரமாக விளையாடி புகழின் உச்சத்தில் இருந்தார். 90-களில் புகழின் உச்சியில் இருந்து வீடு,கார் என ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கினார்.தற்போது அந்த சொத்துக்கள் எல்லாம் ஏலத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1991 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தேர்வானார்.இவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய தோழர்,இரண்டு பெரும் ஒன்றாக பள்ளிக்கூடத்தில் படித்து பின்பு ஒரே சமயத்தில் இந்திய அணிக்காக விளையாடினார்கள்.

வினோத் கம்பளி பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.1996 ஆம் ஆண்டு இந்திய மற்றும் ஸ்ரீலங்கா அணிகளுக்கு இடையே உலக்கோப்பை அரையிறுதி போட்டி நடைபெற்று இருக்கும் போது,இந்தியா தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும்,ஒரு பக்கம் வினோத் கம்பளி மட்டும் நிலைத்து நின்று ஆடிட்டு இருக்கும் போது,மறுபக்கம் விக்கெட் சரிந்து கொண்டிருக்கும், அதை பார்த்த ரசிகர்கள் மைதானத்திற்குள் கற்களை வீசியும்,நெருப்பை பற்றவைத்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

உடனே மைதானத்தில் இருந்த வீரர்களை பத்திரமாக அழைத்து சென்று,மேட்ச் பாதியிலே கைவிட்டு,ஸ்ரீலங்கா வெற்றி என முடிவு வந்தது.அப்போது வினோத் கம்பளி கண்ணீர் விட்டு அழுதுகொண்டே மைதானத்தை விட்டு வெளியேறுவார்.அதுவே அவருடைய கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருந்தது.

இதையும் படியுங்க: கல்லூரி பேராசிரியர் கழிவறையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்!

இப்படி கிரிக்கெட்டை உயிருக்கு உயிராக ரசித்த வினோத் கம்பளி,அவருடைய தவறான பழக்கத்தால் பெயர்,புகழை எல்லாம் இழந்தார் .இவர் புகழின் உச்சத்தில் இருக்கும் போது சாதாரண ஹோட்டலில் வேலை பார்க்கும் ஒரு பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அப்போது அவர் 2 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டினார்.தற்போது அதனுடைய வங்கி லோனனை திருப்பி செலுத்த முடியாமல் 8 கோடி மதிப்பில் உள்ள அவருடைய வீடு ஏலத்தில் வந்துள்ளது.

ஒரு பக்கம் வீட்டை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோத் கம்பளிக்கு சச்சின் உட்பட பல முன்னாள் வீரர்கள் உதவி செய்து வருகின்றனர்.இவருக்கு ஆரம்பத்தில் சச்சின் எவ்ளோ அறிவுரை கூறியும் கேட்காமல் அலட்சியப்படுத்தினார் என்ற தகவலும் கூறப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.