காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பெரிய தெரு முனை பகுதியில் பாமக பிரமுகர் ஜவகர் என்பவர் காயலான் கடை வைத்துள்ளார் . அவர் கடையின் அருகே திமுகவினர் புதிய கொடிக்கம்பம் நடுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த போது அதனை ஜவகர் தடுத்து நிறுத்தி தேர்தல் நன்னடத்தை விதிகள் இருப்பதாக கூறியதும் திமுகவினர் திரும்பி சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள அருள்மணி என்பவருடன் பத்துக்கும் மேற்பட்டோர் வந்து திமுக கொடி கம்பத்தை ஜவகர் கடை முன்பு அமைத்தனர்.
ஜவகர் இதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த போது , அருள்மணி ஜவகரை தாக்கியதாக கூறப்படுகிறது. தன்னை தாக்கி விட்டார்களே என்று அசிங்கப்பட்ட ஜவகர் , பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற போது, அந்தப் பெட்ரோல் திமுகவினரின் மீதும் பட்டதாக தெரிகிறது.
இதனால் தங்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்த வந்ததாக திமுகவினர் ஜவகர் மீது தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் தேர்தல் நடத்தை விதிகளை மீறி திமுகவினர் செயல்பட்டு கொடி கம்பத்தை அமைத்ததாகவும் மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜவகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜவகர் தாக்கப்பட்டவை அறிந்த பாமக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்து. இருபுறமும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி முரளி தலைமையிலான காவல்துறையினர் துரிதுமாக செயல்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் பதட்டத்தை தணிக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் நடப்பட்ட திமுக கொடி கம்பத்தையும் காவல்துறையினர் அகற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தன் கடைக்கு முன்பு அமைக்கப்பட்ட கொடி கம்பம் போன்ற அராஜக செயலில் ஈடுபட்ட திமுக உறுப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.