தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பதற்கு இருக்க வேண்டிய சூழலில் அவருடன் ஒரே ஒரு சிஆர்பிஎஃப் மட்டுமே உள்ளார்.
இதையும் படியுங்க: மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!
மேலும் அவரது பாதுகாப்பிற்காக கேரளாவை சேர்ந்த பவுன்சர்கள் உடன் வருகிறார்கள். இந்த நிலையில் தாண்டிக்குடி பகுதியில் நடைபெற்ற ஜனநாயகன் படப்பிடிப்பின் போது அங்கு அங்கு சென்ற ஊடகவியலாளர்களை நடிகர் விஜயின் பவுன்ஸர்கள் தடுத்து நிறுத்தியதால் சில சர்ச்சை ஏற்பட்டது.
மேலும் அவர்கள் மலை மீது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இன்று சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த நடிகர் விஜயுடன் வந்த பவுன்சர்கள் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களை தடுத்து நிறுத்தியதுடன் அவர்களின் பொருள்களை பிடித்து இழுத்ததால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதனால் வாக்குவாதம் முற்றிப் போய், பவுன்சருக்கு சரமாரி அடி விழுந்தது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியும் தனியார் பவுன்சர்களை விஜய் பயன்படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
This website uses cookies.