தமிழகம்

கோவை மருதமலை கோவில் கும்பாபிஷேகத்தில் விதி மீறல்? நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக் கூறி, இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் கோவை கோட்ட துணை ஆணையர் செந்தில் குமாருக்கு தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதையும் படியுங்க: ஜெயலலிதாவுக்கு எதிராக பேச காரணம் என்ன? 30 ஆண்டுகளுக்கு பின் காரணத்தை கூறிய ரஜினிகாந்த்!

சண்டிகேஸ்வர சேவா அறக்கட்டளையின் தலைவர் சுரேஷ்பாபு அறிவுறுத்தலின்படி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.அந்த நோட்டீஸில், தமிழ் வேள்வி ஆசிரியை மற்றும் வேத விற்பன்னர்களை சமமாக கருதிட உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள துணை ஆணையர், உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், கோயில் நிர்வாகம் தமிழ் வேள்வி ஆசிரியைக்கு உரிய மரியாதை அளிக்கும் என்று உறுதி அளித்து இருந்தார்.

மேலும், 36 யாகசாலை குண்டங்களில் 36 வேத தமிழ் அறிஞர்களைக் கொண்டு யாக சாலை வேள்வி நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி, மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் செயல்பட்டு உள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டி உள்ளார்.

குறிப்பாக, 31.03.2025 மற்றும் 02.04.2025 தேதிகளில் நடைபெற்ற வேள்வி வழிபாடுகளில் இந்த வாக்குறுதி மீறப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். உயர் நீதிமன்றத்தில் அளித்த எழுத்துப் பூர்வமான வாக்குறுதியையும், நீதிமன்றம் பதிவு செய்த இடைக்கால உத்தரவையும் மீறியது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும், வேண்டுமென்றே பொறுப்பை மீறுவது நீதிமன்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் செயலாகும் என்றும் அந்த நோட்டீஸில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

யாக சாலை வேள்வி குண்டா நால்வுருவல் அதிக சத்தத்துடன் ஒலித்தது என்றும், 36 யாகசாலை குண்டங்களில் தமிழ் அறிஞர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தனது நேரடி ஆய்வில் கண்டு அறிந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி திட்டமிட்டு மீறப்பட்டு உள்ளதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

ஆகவே, 36 வேத தமிழ் அறிஞர்கள் 36 யாகசாலை குண்டங்களில் தமிழில் யாகசாலை வேள்வி செய்ததற்கான ஆதாரங்களையும், வீடியோ பதிவுகளையும் இந்த அறிவிப்பைப் பெற்ற நாளில் இருந்து மூன்று நாட்களுக்குள் வழங்கும்படி துணை ஆணையருக்கு தமிழ்ப் பண்பாட்டு நிறுவனம் கோரி உள்ளது. அவ்வாறு வழங்கத் தவறினால், நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.