Categories: தமிழகம்

கோவையில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல் : அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்வு!!

தமிழகம் முழுவதும் தற்போது இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அறிகுறி அதிக அளவில் பரவி வருகிறது. இது குறித்த தகவலின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 68 நபர்களுக்கு தற்போது காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் 30 படுக்கைகள் தயாராக இருப்பதாகவும் காய்ச்சல் அறிகுறிக்கு கடந்த சில நாட்களில் பெரும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு சுய பாதுகாப்பு ஏற்பாடு ஏற்படுத்திக் கொண்டார்களோ அதே போல தற்போதைய சூழ்நிலையிலும் முக கவசம் கைகளை சுத்தமாக கழுவுதல் சானிடைசர் உபயோகிப்பது இடைவெளிகள் அதிகரிப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

அதேபோன்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கின்ற காரணத்தினால் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை குழந்தைகள் வயதானவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் என்றும் கதர் பருத்தி போன்ற ஆடைகளை அணிய வேண்டும் என்வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று சிங்கப்பூர் விமானத்தில் இருந்து கோவை வந்த நான்கு பயணிகளுக்கு காய்ச்சல் குறித்த பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய முகவரிகள் வாங்கி தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள் இருப்பதாகவும், மேலும் தற்போது தமிழகத்தில் பரவியுள்ள இன்ஃப்ளுயன்சா ப்ளூ காய்ச்சல் அறிகுறி 13 வயதில் இருந்து 60 வயதுக்குட்பட்ட பொதுமக்களுக்கு அதிகளவிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் காய்ச்சல் அறிகுறி தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சாதாரணமாகவே பெண்களுக்கு குழந்தைகளை பராமரிப்பது பெரியோர்களை பராமரிப்பது போன்ற காரணங்களினால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதன் அடிப்படையில் தற்போது காய்ச்சல் அறிகுறி அதிகரித்திருப்பதாக தெரிவித்து இருப்பார்கள் எனவும்.மேலும் கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் காய்ச்சல் குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் என்று கோவை அரசு மருத்துவமனை முதல்வர் Dr.A. நிர்மலா தகவல் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

7 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

8 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

8 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

9 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

10 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

10 hours ago

This website uses cookies.