தமிழகம் முழுவதும் தற்போது இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அறிகுறி அதிக அளவில் பரவி வருகிறது. இது குறித்த தகவலின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 68 நபர்களுக்கு தற்போது காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் 30 படுக்கைகள் தயாராக இருப்பதாகவும் காய்ச்சல் அறிகுறிக்கு கடந்த சில நாட்களில் பெரும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு சுய பாதுகாப்பு ஏற்பாடு ஏற்படுத்திக் கொண்டார்களோ அதே போல தற்போதைய சூழ்நிலையிலும் முக கவசம் கைகளை சுத்தமாக கழுவுதல் சானிடைசர் உபயோகிப்பது இடைவெளிகள் அதிகரிப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
அதேபோன்று வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கின்ற காரணத்தினால் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை குழந்தைகள் வயதானவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் என்றும் கதர் பருத்தி போன்ற ஆடைகளை அணிய வேண்டும் என்வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு காய்ச்சல் அறிகுறி குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று சிங்கப்பூர் விமானத்தில் இருந்து கோவை வந்த நான்கு பயணிகளுக்கு காய்ச்சல் குறித்த பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய முகவரிகள் வாங்கி தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள் இருப்பதாகவும், மேலும் தற்போது தமிழகத்தில் பரவியுள்ள இன்ஃப்ளுயன்சா ப்ளூ காய்ச்சல் அறிகுறி 13 வயதில் இருந்து 60 வயதுக்குட்பட்ட பொதுமக்களுக்கு அதிகளவிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் காய்ச்சல் அறிகுறி தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சாதாரணமாகவே பெண்களுக்கு குழந்தைகளை பராமரிப்பது பெரியோர்களை பராமரிப்பது போன்ற காரணங்களினால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதன் அடிப்படையில் தற்போது காய்ச்சல் அறிகுறி அதிகரித்திருப்பதாக தெரிவித்து இருப்பார்கள் எனவும்.மேலும் கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் காய்ச்சல் குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் என்று கோவை அரசு மருத்துவமனை முதல்வர் Dr.A. நிர்மலா தகவல் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.