தமிழகம்

இரவு ஒரு மணிக்கு விராட்கோலிக்கு நடந்த அதிர்ச்சி…டெல்லி அணி செய்த மோசமான செயல்…வைரலாகும் பேட்டி..!

விராட்கோலி தந்தை எடுத்த உறுதியான முடிவு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விராட் கோலி,இவர் தன்னுடைய தனித்துவமான பேட்டிங்கால் பல சாதனைகளை நிகழ்த்தி ரசிகர்களால் கிங் கோலி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய மோசமான பார்மால் விவாத பொருளாக மாறியுள்ள கோலி கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடினார்.

இதனால் கோலியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.இந்த நிலையில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் தன்னுடைய சிறுவயதில் சந்தித்த மோசமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்,தற்போது அது வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்க: இந்திய அணி செஞ்சது சரியா…ICC ரூல் என்ன சொல்லுது…ஆதங்கத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து கேப்டன்..!

அந்த பேட்டியில் கோலி கூறியது,நான் அண்டர் டெல்லி அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது நள்ளிரவு ஒரு மணிக்கு திடீரென என்னை அணியில் இருந்து நீக்கினார்கள்.அதற்கு பதிலாக வேறொரு வீரரை தேர்வு செய்தார்கள்,அதன்பிறகு எனது தந்தைக்கு அழைத்து உங்கள் மகனுக்காக நீங்கள் பணம் கொடுத்தால் இரண்டு ஆட்டத்திற்கு பிறகு அணியில் சேர்க்கலாம் என்று கூறினார்கள்.

உடனே எனது தந்தை அவனை விளையாட வைக்க ஒரு பைசா கூட கொடுக்கமாட்டேன்,அவனது திறமையால் வாய்ப்பு கிடைத்தால் கிடைக்கட்டும்,இல்லையென்றால் அவனுக்கு இதுதான் விதி என கடந்து போக வேண்டி தான் என்று கூறினார்.டெல்லி அணியின் இந்த மோசமான நிகழ்வு விராட்கோலி பின் நாளில் பெரும் ஜாம்பவானாக உருவாக அடித்தளமிட்டது என்று கூறப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.