தமிழகம்

விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!

ICC விதிமுறையை மீறிய கோலி

இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப காலமாக இவருடைய மோசமான பேட்டிங்கால் பெரும் விவாத பொருளாக மாறினார்.

இதையும் படியுங்க: ஒரு மாதத்திற்குள் OTT-க்கு தாவும் விடாமுயற்சி…தேதி குறிச்சாச்சு..!

அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் விதமாக நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் தொடரில் தன்னுடைய அசத்தலான பேட்டிங் திறமையால் சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு தூணாக இருந்தார்,ஆனால் அவர் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ICC விதிமுறையை மீறினார்,அப்போது பாகிஸ்தான் வீரர்கள் யாரும் நடுவரிடம் சென்று முறையிடாததால் அதிலிருந்து தப்பித்தார்,ஆம் ஹாரிஸ் ரவூப் வீசிய 21 வது ஊரின் போது விராட் கோலி கவர் பாயிண்ட் திசையில் பந்தை அடித்து சிங்கிள் அடிப்பார்,பாகிஸ்தான் பீல்டர் அருகில் இருந்ததால் வேகமாக அந்த ரன்னை ஓடி முடிப்பார்,அப்போது பீல்டர் கோலியை ரன் அவுட் செய்யும் நோக்கில் பந்தை ஸ்டம்ப்பை நோக்கி எறிவார்,ஆனால் கோலி மறுபுறம் கிரீஸை அடைந்தவுடன் பீல்டர் வீசிய பந்தை பிடிக்க முயல்வார்.

அதாவது இந்த செயல் obstructing the field அல்லது மைதானத்தில் தடங்கல் ஏற்படுத்துதல் என்கிற விதிப்படி தவறு,MCC கிரிக்கெட் சட்டத்தில் 37 வது விதியாக இது உள்ளது,இந்த விதிமுறையை தான் நேற்று விராட் கோலி மீறியுள்ளார்,பாகிஸ்தான் வீரகள் நடுவரிடம் இது குறித்து அப்போது முறையிட்டு இருந்தால் விராட்கோலி 41 ரன்னுக்கு ஆட்டமிழந்திருப்பார்,அவர் பக்கம் நேற்று அதிஷ்டம் இருந்ததால் அதிலிருந்து தப்பித்து சதம் அடித்தார்,இதை நேற்று போட்டியின் வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர் கவனித்து கோலி இதுமாதிரி செயல்களை இனி வரும் போட்டிகளில் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.