இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப காலமாக இவருடைய மோசமான பேட்டிங்கால் பெரும் விவாத பொருளாக மாறினார்.
இதையும் படியுங்க: ஒரு மாதத்திற்குள் OTT-க்கு தாவும் விடாமுயற்சி…தேதி குறிச்சாச்சு..!
அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும் விதமாக நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் தொடரில் தன்னுடைய அசத்தலான பேட்டிங் திறமையால் சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு தூணாக இருந்தார்,ஆனால் அவர் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ICC விதிமுறையை மீறினார்,அப்போது பாகிஸ்தான் வீரர்கள் யாரும் நடுவரிடம் சென்று முறையிடாததால் அதிலிருந்து தப்பித்தார்,ஆம் ஹாரிஸ் ரவூப் வீசிய 21 வது ஊரின் போது விராட் கோலி கவர் பாயிண்ட் திசையில் பந்தை அடித்து சிங்கிள் அடிப்பார்,பாகிஸ்தான் பீல்டர் அருகில் இருந்ததால் வேகமாக அந்த ரன்னை ஓடி முடிப்பார்,அப்போது பீல்டர் கோலியை ரன் அவுட் செய்யும் நோக்கில் பந்தை ஸ்டம்ப்பை நோக்கி எறிவார்,ஆனால் கோலி மறுபுறம் கிரீஸை அடைந்தவுடன் பீல்டர் வீசிய பந்தை பிடிக்க முயல்வார்.
அதாவது இந்த செயல் obstructing the field அல்லது மைதானத்தில் தடங்கல் ஏற்படுத்துதல் என்கிற விதிப்படி தவறு,MCC கிரிக்கெட் சட்டத்தில் 37 வது விதியாக இது உள்ளது,இந்த விதிமுறையை தான் நேற்று விராட் கோலி மீறியுள்ளார்,பாகிஸ்தான் வீரகள் நடுவரிடம் இது குறித்து அப்போது முறையிட்டு இருந்தால் விராட்கோலி 41 ரன்னுக்கு ஆட்டமிழந்திருப்பார்,அவர் பக்கம் நேற்று அதிஷ்டம் இருந்ததால் அதிலிருந்து தப்பித்து சதம் அடித்தார்,இதை நேற்று போட்டியின் வர்ணனையில் இருந்த சுனில் கவாஸ்கர் கவனித்து கோலி இதுமாதிரி செயல்களை இனி வரும் போட்டிகளில் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.