விருதுநகர் : அரசு ஆய்வு மாளிகை முன்பு சாலையை கடக்கும் முயன்ற கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நவநீதன், கணேசன் மற்றும் சக்திவேல் கோவில்பட்டியில் நடந்த திருமண விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர் செல்லும் பொழுது, மதுரை, திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆய்வு மாளிகை பிரிவில் காரில் கடக்க முயற்சி செய்துள்ளனர்.
சாலையை கடக்க முயன்ற போது அந்த கார் மீது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி சென்ற தனியார் பேருந்து பேருந்து மோதியதில் கார் சாலையில் ஓரம் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த கடையின் முன்பு விழுந்தது. இதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்து சாலை கடக்கும் முயன்ற மற்றொரு கார் மீதும் லேசாக உரசியது. இதில், அந்த கார் சேதமடைந்தது.
கோவில்பட்டியில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்ற நவநீதன் மற்றும் சக்திவேல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கணேசன் என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைத்து வருகின்றன.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.