விருதுநகர் : அரசு ஆய்வு மாளிகை முன்பு சாலையை கடக்கும் முயன்ற கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நவநீதன், கணேசன் மற்றும் சக்திவேல் கோவில்பட்டியில் நடந்த திருமண விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் கோயம்புத்தூர் செல்லும் பொழுது, மதுரை, திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆய்வு மாளிகை பிரிவில் காரில் கடக்க முயற்சி செய்துள்ளனர்.
சாலையை கடக்க முயன்ற போது அந்த கார் மீது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி சென்ற தனியார் பேருந்து பேருந்து மோதியதில் கார் சாலையில் ஓரம் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த கடையின் முன்பு விழுந்தது. இதில் அந்த காரில் பயணம் செய்த மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்து சாலை கடக்கும் முயன்ற மற்றொரு கார் மீதும் லேசாக உரசியது. இதில், அந்த கார் சேதமடைந்தது.
கோவில்பட்டியில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்ற நவநீதன் மற்றும் சக்திவேல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கணேசன் என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஊரக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைத்து வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.