திண்டுக்கல் : வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை அரசு அலுவலங்கள் அருகே சூரியன் விடிவதற்கு முன்பே மது பிரியர்களுக்கு விடிவு காலத்தை தந்த திராவிட முன்னேற்றக் கழகமே என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகள் அனைத்திலும் விடியா அரசின் அனுமதியின்றி 24 மணி நேரமும் பார்கள் செயல்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து பூசாரிபட்டி அம்சா நகர் சேல்ஸ்மேன் என்ற பெயரில், திமுக ஆட்சி பதவியேற்று முதல் கையெழுத்து சிறப்பு என்ற தலைப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் தங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் மூலம் சூரியன் விடிவதற்கு முன்பே மது பிரியர்களுக்கு விடிவு காலத்தை தந்த திராவிட முன்னேற்றக் கழகமே … குடியை குடித்து எங்கள் குடும்பங்கள் அழிந்தாலும் உங்கள் திராவிடக் குடும்பம் அழியக்கூடாது என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், யூனியன் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆகிய அரசு அலுவலகங்கள் அருகே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் இந்த பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.
சுவரொட்டி ஒட்டிய நபர் உண்மையிலேயே டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேன் யாக பணிபுரிகிறாரா என்று குடிமக்கள் சந்தேகத்துடன் உள்ளனர்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.