உருமாறிய கொரோனா எதிரொலியாக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும்,பரிசோதனை செய்யவும் அதற்கான மையம் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாளை முதல் பயணிகளை கண்காணிக்க மீண்டும் தெர்மல் ஸ்கேனரை செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் இன்று முதல் பயணிகளை கண்காணிக்கும் பணியினை கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்வளவன் துவக்கி உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், காலை ஏர் அரேபியா, மாலை சிங்கப்பூர் விமானம் என இரண்டு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது.
மொத்தம் 22 விமானங்கள் கோவை விமான நிலையத்தில் இயக்கப்படுகிறது. இதில் வரும் பயணிகளை கண்காணிக்கவும், பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பயணிகளை கண்காணிக்க 24 மணி நேரமும் தெர்மல் ஸ்கேன் முறை செய்யப்பட்டுள்ளதாகவும்,பயணிகளுக்கு நோய் தொற்று இருந்தால் 14 நாட்கள் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.
விமான நிலையம் முழுவதும் தொடர்ந்து கிருமிநாசினி அடிக்கப்பட்டு வருவதாகவும் விமான நிலையத்திலேயே ஐசலேஷன் ரூம் தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதேபோல ஆர்டிபிசிஆர் பரிசோதனையாக அறை தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களின் பெயரில் பயண சீட்டு வழங்கப்பட்டு வருவதாகவும், சளி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் பயணிகளுக்கு மட்டும் ஆர்டிபிசியால் பரிசோதனை செய்யப்படுவதாகவும் முக கவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்டவை தொடங்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
This website uses cookies.