திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட இளம் சிறார் நீதிக்குழுமம் செயல்பட்டு வருகிறது. பல்லடம் மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குபதிவு செய்யப்பட்டது.
16 வயது சிறுமிக்கு 17 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
இதையும் படியுங்க: பெண்களை துரத்திய திமுக கட்சி கொடி பொருந்திய கார்? வைரலான வீடியோ : போலீஸ் விளக்கம்!
இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி, திருப்பூர் மாவட்ட இளம் சிறார் நீதிக்குழுமத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற வழக்குகளை 6 மாதத்துக்குள் விசாரணை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே 7 சாட்சிகளின் விசாரணை முடிந்தது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் விசாரணை நடத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. ஆனால் இன்று வழக்கின் விசாரணைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் கவிதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து இளம்சிறார் நீதிக்குழும முதன்மை நடுவர் செந்தில்ராஜா, சட்ட உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா ஆகியோர் உத்தரவிட்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.