420களை ஒழிக்க போகிறோம்.. தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு அலை பெருகுது : பாஜக மாநில பொதுச்செயலாளர் பெருமிதம்!!
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகம் இன்று திண்டுக்கல்லில் திறக்கப்பட்டது பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன் ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இராம சீனிவாசன் பேசியதாவது,தமிழக முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியிலும் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகம் திறந்து வருகிறோம். இதைத்தொடர்ந்து அனைத்து சட்டமன்றங்களிலும் அனைத்து தொகுதி வாரியாக தேர்வு தேர்தல் அலுவலகம் தொடங்க உள்ளோம்.
தமிழக அரசியலில் சூழல் தற்போது சூடாகிக் கொண்டே வருகிறது. நட்டா தமிழகம் வருகிறார் நிர்வாகிகள் சந்திப்பு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் வரும் 25ஆம் தேதி பாரத பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்த வரை கூட்டணி பேச்சு வார்த்தை என்பது நடந்து வருகிறது. யாருடன் கூட்டணி என்பதை தலைமை தான் முடிவு அறிவிக்கும். யார் எந்த கூட்டணி வேட்பாளர் எந்த தொகுதியில் நின்றாலும் 39 தொகுதிகளும் பிரதமர் மோடி நிற்பதாக நினைத்து பணியாற்றுகிறோம்
பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்களில் வரக்கூடிய கருத்துகணிப்புகள் தவறானது பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் வளர்ந்து வருகிறோம்.
இந்த தேர்தலில் 20% ஓட்டு பாரதிய ஜனதாவிற்கு கிடைக்கும் அதை தேர்தலுக்குப் பிறகு கண்கூடாக பார்க்க முடியும் இந்த தேர்தல் முடிவுகள் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப்போகிறது மிகப்பெரிய ஆதரவலை தமிழகத்தில் பாஜகவிற்கு வீசிவிடுகிறது
நத்தம் அருகே 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் மின் வசதி சாலை வசதி செல்போன் தொடர்பு கூட இல்லாத நிலையில் இந்த விடியல் அரசு இருக்கிறது. ஆனால் எந்த தொலைத் தொடர்பும் இல்லாத அந்த இடத்தில் உள்ள கிராம மக்கள் மோடியை நன்றாக தெரியும் என்கிறார்கள்.
நாம் தமிழர், உள்ளிட்ட கட்சிகளுக்கு செல்லக்கூடிய ஓட்டுக்கள் இந்த முறை பாஜக விற்கு கிடைக்கும். தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மரியாதையாக பேசுவதாக தெரிவித்துள்ளார்.
அதற்குரிய மரியாதை அவருக்கு கிடைக்கும் பொது சிவில் சட்டம் நாட்டிற்கு கட்டாயம் தேவை உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் இது உள்ளது எந்த மதத்திற்கும் எந்த நாட்டிலும் தனி சட்டம் கிடையாது
காஷ்மீரில் 370 ஒழித்ததால் இந்த முறை 370 இடங்களில் வெற்றி பெறுவோம் அடுத்ததாக 420ஐ நாடு முழுவதும் ஒழிக்க போகிறோம் அதனால் அடுத்த முறை 420 இடங்களை பாஜக கைப்பற்றும்.
தமிழகத்தில் தொழில் முதலீடு 6 லட்சம் கோடி என்று கூறுகிறது திமுக அரசு ,ஆனால் தென் மாவட்டங்கள் எந்த பகுதிகளும் எந்த முதலீடும் செய்யப்படவில்லை. எந்த திட்டமும் எந்த ஒரு முயற்சியும் திருச்சிக்கு தென்பகுதியில் திமுக அரசு கொண்டுவரவில்லை இந்த வள்ளலில் நடக்கிறது திமுக அரசு.
தமிழகத்தில் காமராஜர் காலத்தில் இருமுனை போட்டி மட்டுமே இருந்து வந்தது, அதற்கு பிறகு இந்த முறை தேர்தலில் காமராஜர் காலத்திற்குப் பிறகு மும்மூனைப் போட்டி நடக்கிறது. அது அதிமுக திமுக பாரதிய ஜனதா கட்சி என்ற போட்டி பாரதிய ஜனதா கட்சி புலி பாய்ச்சலில் களப்பணி ஆற்றுகிறது என தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.