Categories: தமிழகம்

இபிஎஸ் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு நடந்ததற்கு நாங்க தான் காரணம் : பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்!!

கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள பாபா இல்லத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின்
கோவை மாநகர மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ், நேற்று முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ் அவர்களை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அம்மாவால் விரட்டி அடிக்கப் பட்டவர் முனுசாமி.

முனுசாமிக்கு கட்சியில் 2 ம் தலைவராக வாய்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ். எடப்பாடியே முனுசாமிக்கு எதிராக பேசிய போது ஆதரவு கொடுத்தவர் ஓ.பி.எஸ். அதிமுகவிற்காக ஓபிஎஸ் உழைக்கவில்லை என்று சொல்கிறார்.

ஆனால் ஓ.பி.எஸ். கட்சியில் உள்ளது தான் செய்த பாக்கியம் என அம்மா கூறினார். விசுவாசம் மிக்க தொண்டன் என்ற பெயரை அம்மாவிடம் வாங்கியவர் ஓ.பி.எஸ். அவரை பற்றி பேச யாருக்கும் தகுதி யோக்கியதை கிடையாது.

வருமான வரி சோதனையின் போது தொண்டர்களை அடியாட்கள் போன்று வீட்டின் முன்பு குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 1000 கோடி செலவு செய்து பதவி வரவில்லை என்று எடப்பாடி, முனுசாமியை வைத்து பேசுகிறார். அதிமுகவில் தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர்.

இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி. கோடநாட்டில் கொலை கொள்ளை நடந்துள்ளது. அம்மாவின் வீட்டிற்கு காவல் போடாதவர் எடப்பாடி. அம்மாவின் வீட்டை தனியார் வீடு என்றவர் எடப்பாடி. எடப்பாடி தலைமையில் கடந்த 4 அரை வருடங்களில் செய்த தவறுகளை பட்டியலிட்டு வெளியிடுவோம்.

நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விரைவில் மற்றவர்கள் மீதான பட்டியலை வெளியிடுவோம் என்றார். அதிமுக தலைமை அலுவலகத்தில் மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது போன்ற செயல்கள் எல்லாம் நடைபெறுகிறது.

வங்கியில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பாதுகப்பாக பார்த்துக் கொண்டவர் ஒ.பி.எஸ் தான். நீதிமன்றம் ஜூலையில் நடத்திய கூட்டம் முறையானது அல்ல என கூறியுள்ளது. தளவாய் சுந்தரம் கட்சி பைலாவை முதலில் படிக்க வேண்டும்.

கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லை. ஓபிஎஸ் ஒரு முதலமைச்சர் ஆக இருந்து மற்றொருவரை முதலமைச்சராக அறிவித்தவர். கட்சியின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி. அம்மாவின் சீட்டுக்கு துரோகம் செய்பவர் எடப்பாடி.

ஓ.பி.எஸ் தீர்புக்கு பின் கட்சி அலுவலகத்துக்குள் செல்வார். கட்சி தலைவரும் ஓ.பி.எஸ். தான் பொருளாளரும் அவர் தான். சசிகலா கட்சியின் உறுப்பினர். எப்பவும் போல இருப்பார். அதிமுக அழிந்து விட கூடாது என நினைப்பவர் பிரதமர். பிரதமருக்கு துரோகம் செய்ய முயன்றவர் எடப்பாடி.

பாஜக அதிமுக விவகாரத்தில் தலையீடு செய்வதில்லை.யாரும், எந்த கட்சியும் சமரசம் செய்யும் அளவிற்கு அதிகமுகவினர் இல்லை. கொடி கட்சி சின்னம் அனைத்தும் ஓ பி எஸ் தலைமையில் இருக்கும் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

5 minutes ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

41 minutes ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

1 hour ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

1 hour ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

2 hours ago

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

2 hours ago

This website uses cookies.