அமலாக்கத்துறை வந்தால் விருந்து வைத்து உபசரிக்க காத்திருக்கிறோம் : அண்ணாமலைக்கு திமுக அமைச்சர் பதிலடி!
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோடநாடு வழக்கில் தடயவியல் ஆய்வாளர்கள் திருச்சியில் சோதனை நடத்தியதை பொறுத்தவரையில், அவர்கள் தங்களது கடமையை செய்துள்ளனர்.
அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும். பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகிய இருவருமே பா.ஜ.,வின் கொத்தடிமைகள். இருவரும் தங்களது கட்சியை பா.ஜ.,வினரிடம் அடகு வைத்துவிட்டனர்.
மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்பதால் பா.ஜ.,வின் அண்ணாமலை கூறுவதை போன்று அமலாக்கத்துறை வந்தாலோ, வருமான வரித்துறை வந்தாலோ நாங்கள் கவலைப்பட போவதில்லை.
அமலாக்கத்துறையை எந்த நேரத்திலும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அமலாக்கத்துறை வந்தால் காபி விருந்து வைத்து வரவேற்று உபசரிக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.