காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் வயது 85. இவருக்கு அரசு சார்பில் குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டது . இவர்கள் அங்கு குடியிருந்து வந்த நிலையில் சிறுணை பெருகல் கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் வெங்கடேசன், பெருமாள், அன்னக்கிளி ஆகியோர் கடந்த 14.07.2024 அன்று இரவு புல்டேஷ்ஷர் வைத்து இடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இவர்களுடைய வீட்டை இடித்து தள்ளிவிட்டு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில் வீடு இன்றி தவித்த இந்த பெண்மணிகள் தெருவில் படுத்துறங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மனுநீதி நாள் முகாம் ஒட்டி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்துக்கு வந்தனர்.
பின்னர் திடீரென மாவட்ட வருவாய் அலுவலர் எதிரே தரையில் அமர்ந்து கொண்டு நாங்கள் செத்துப் போறோம், நாங்கள் செத்துப் போறோம், எங்களுக்கு வீடு இல்லை, எங்களுக்கு வீடு இல்லை என கூக் குரல் இட்டவாறு தரையில் படுத்து உருண்டனர்.
இதனால் மக்கள் குறைதீர் முகாமில் அதிர்ச்சியும் ,பரபரப்பும் ஏற்பட்டது. உடனே மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் எழுந்து வந்து அவர்களிடம் சமாதான முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுதும் அவர்கள் சமாதானமடையாமல் சத்தமிட்டவாறே இருந்தனர்.
பின்னர் காவலர்கள் விரைந்து வந்து அவர்கள் வைத்திருக்கும் பையில் ஏதாவது மண்ணெண்ணெய் பெட்ரோல் போன்ற ஏதாவது அசம்பாவிதம் செய்யும் பொருட்கள் வைத்திருக்கிறார்களா என சோதனை இட்டனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் கூட்டரங்கில் இருந்து இழுத்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.