Categories: தமிழகம்

அனைவருக்கும் சமமான, தரமான கல்வி வழங்க அரசை வலியுறுத்துவோம் : பல்கலைக்கழக கூட்டமைப்பின் தலைவர்!!

கோவை : கோவையில் நடைபெறும் தென் மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பில் இந்தியா முழுவதும் அனைவருக்கு சமமான, தரமான கல்வி வழங்குவது குறித்த விவாதித்து முக்கிய கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்த உள்ளதாக இந்திய பல்கலைகழக கூட்டமைப்பின் தலைவர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

இந்திய பல்கலைக்கழகங்களில் கூட்டமைப்பின் சார்பில், தென்மண்டல துணைவேந்தர்கள் சந்திப்பு மற்றும் கருத்தரங்கு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ளது.

இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொண்டுள்ள உள்ளனர். இதுகுறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தலைவர் திருவாசகம், பொதுச் செயலாளர் பங்கஜ் மிட்டல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், ஐக்கிய நாடுகளின் நிலையான முன்னேற்ற குறிக்கோள்கள் ஆக உள்ள வறுமையின்மை, பசியின்மை, உடல் நலம், தரமான கல்வி உள்ளிட்ட 17 வகைகளில், நாளை நடைபெறும் தென்மண்டல துணைவேந்தர்கள் சந்திப்பில் இந்தியா முழுவதும், சமமான, தரமான கல்வி வழங்குவது குறித்து விவாதிக்க உள்ளோம்.

மேலும் தற்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு கல்வி மற்றும் மாணவர்களை தயார்படுத்த வேண்டும். தற்போது உள்ள சூழலில் உயர் கல்வியை முடித்து விட்டு வரும் மாணவர்களுக்கு பணிகளுக்கு செல்லும் போது தேவையான திறன் இருப்பது இல்லை, அவற்றை பிற நாடுகளை போல மேம்படுத்த வேண்டும்.

பின்லாந்தில் மொத்த வருவாயில் 20 சதவீதம் தரமான கல்விக்கு ஒதுக்குவதால் அந்த நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியா 125 ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல் மற்ற நாடுகளை விட தரமான கல்வி வழங்க மத்திய , மாநில அரசுகள் பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதித்து, அவற்றை மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கையாக வைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வரும் மார்ச் மாதத்தில் இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் சார்பில் தேசிய அளவிலான துணைவேந்தர்கள் சந்திப்பானது நடைபெற உள்ளது. அதில் நாடு முழுவதும் இருந்து வரக்கூடிய சுமார் 600க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய பல்கலைக்கழகம் கூட்டமைப்பின் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதேபோல் இந்த ஆண்டும் பிரதமர் மோடி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

34 minutes ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

43 minutes ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 hour ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

2 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

3 hours ago

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. 49 வயது கூலித்தொழிலாளியின் கோரமுகம்!!

கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…

3 hours ago

This website uses cookies.