Categories: தமிழகம்

எத்தனை தடை போட்டாலும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தி காட்டுவோம் : தமிழக அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆறு ஒன்றியங்களைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்துவது குறித்தும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழக முழுவதும் 7000 இடங்களில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் உழவார பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் முடிவில் செய்ததியா ளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி ஊர் வலம் ஆரம்பித்த காலத்தில் இருந்து அதற்கு தடை என்பதை விதித்து வருகிறார்கள்.

பனி மாதா ஊர்வலத்தையோ மொகரம் பண்டிகை அன்று நடக்கும் ஊர்வலத்தையோ அரசு தடை செய்வதில்லை. இருப்பினும் எவ்வித தடை வந்தாலும் அதை மீறி விநாயகர் சக்தி ஊர்வலம் நடத்துவோம். இதற்காக நாங்கள் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம். கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் திட்டமிட்டபடி ஊர்வலம் நடத்தப்படும்.

சாதிய சண்டைகள் அரசியல் கட்சிகளால் ஏற்படுத்தப்படுகின்றன. நமது சின்ன வயதில் இருந்ததை விட இப்போது சாதி சண்டை அதிகமாக இருக்கிறது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதி சண்டை நடைபெறுகிறது. நாங்குநேரியில் ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் சண்டை ஏற்படுகிறது. சாதியை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் ஏறுகின்றன.

சாதி கட்சிகளை திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்கள் நடத்தி வருகிறார்கள். இந்து முன்னணியை பொறுத்தவரை சாதி பார்ப்பதில்லை அதை மறந்து தான் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்படும். திருவாரூர் மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 10 இடங்களில் ஊர்வலம் நடத்தப்படும்.
அதேபோன்று ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் 7000 இடங்களில் இந்து முன்னணி சார்பில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!

ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…

3 minutes ago

கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…

23 minutes ago

‘கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி? கணவருடன் மனக்கசப்பு?!

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…

43 minutes ago

கங்குவா வசூலை கூட தாண்டாத ரெட்ரோ… சூர்யாவுக்கு வந்த சோதனை!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…

57 minutes ago

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

This website uses cookies.