Categories: தமிழகம்

ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து 25வது நாளாக விசைத்தறியாளர்கள் போராட்டம் : கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு!!

திருப்பூர் : கூலி உயர்வு கொடுக்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து 25 வது நாளாக விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

கோவை திருப்பூர் மாவட்டங்களின் கூட்டமைப்பின் கீழ் ஒன்பது சங்கங்களை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இவர்களிடம் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனர்.


அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாகக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்லடம் இரகத்திற்கு 20% சோமனூர் இரகத்திற்கு 23% கூலி உயர்த்தப்பட்டது. ஆனால் அதை அமுல்படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்களின் மெத்தனமாக இருந்து வருகின்றனர்‌.

இதனை கண்டித்து கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி முதல் இன்று 25 வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், நாள் ஒன்றுக்கு ரூ. 50கோடி வீதம் இதுவரை சுமார் 1300 கோடிக்கு அளவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நேரடி மற்றும் மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரம் முன்பு கோவை தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதனை தொடர்ந்து இன்று, திருப்பூர் மாவட்டம் தெக்கலூர்,மங்கலம்,வஞ்சி பாளையம், அவிநாசி,பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்யும்
விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது வீடுகள் மற்றும் விசைத்தறி கூடங்களில் ஜவுளி உறபத்தியாளர்களை கண்டித்து கருப்பு கொடி ஏற்றியும், குதிரையின் மீது ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை பல்லடம் அருகே காரணம் பேட்டையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இன்று கோவையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

8 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

10 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

10 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

11 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

12 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

12 hours ago

This website uses cookies.