தமிழகம்

குடியை கெடுத்த குடிகார நண்பர்கள்… பாதியில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த காந்திகுப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிய கூடிய காவேரிப்பட்டிணம் அருகே உள்ள பனகமுட்லு கிராமத்தை இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் காவேரிப்பட்டிணம் சேலம் சாலையில் உள்ள எஸ்.எம். கல்யானி திருமண மண்டபத்தில் கடந்த 27ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்திற்கு முதல் நாள் (26ம் தேதி) மாலை அந்த மண்டபத்தில திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வந்தனர். இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் மணமகனின் நண்பர்கள் சிலர் மது போதையில் மண்டபத்திற்கு வந்து நடனம் ஆடினார்கள்.

மேலும் மேடையில் மாப்பிள்ளையை நடனம் ஆட சொன்னார்கள். சிறிது நேரத்தில் மணப்பெண்ணையும் நடனமாடுமாறு கூறினார்கள். அந்த நேரம் மணப்பெண் இது போன்று நடனமாடுவதில் எனக்கு விருப்பம் இல்லை என கூறினார்.

மேலும் பெண்ணின் உறவினர்களும் இது போல எங்கள் வீட்டு பெண்ணை நடனமாட சொல்வது தவறு என்றனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு பெண் வீட்டாரை மணமகனுடன் வந்த சிலர் தாக்கினார்கள்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணப்பெண் திருமணத்திற்கு முன்பே இப்படி நடந்து கொள்கிறார்களே, இவரை திருமணம் செய்து கொண்டால் எனது வாழ்க்கை என்ன ஆகும் என கூறினார்.

இதையடுத்து அந்த நபரை திருமணம் செய்து கொள்ள பெண் மறுத்தார். இதனால் வரவேற்புடன் திருமணம் நின்றது. மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்கள், அலங்கார வளைவுகள் போன்றவை அவசர, அவசரமாக இரவோடு இரவாக அகற்றப்பட்டு விட்டன. மேலும் மணமகன், மணமகள் வீட்டாரும் ஊருக்கு திரும்பினார்கள்.

இதனிடையே காலை திருமணத்திற்கு வந்த பலரும் மண்டபத்திற்கு சென்றார்கள். காலையில் மண்டபம் பூட்டப்பட்டிருந்த தகவல் அறிந்து கேட்ட போது, வரவேற்பில் ஏற்பட்ட பிரச்சினையில் திருமணம் நின்றதை அறிந்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.