நிலக்கோட்டை தாலுகாவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டுவாதக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா பகுதிகளான நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, அனைப்பட்டி, விளாம்பட்டி, கொடைரோடு, பட்டிவீரன்பட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பட்டப்பகலில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் 24-மணிநேரமும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது.
இதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளான கேரளா லட்டரிகள் மற்றும் சிங்கம், டியர், தங்கம், குயில், நல்லநேரம், மணி, விஷ்ணு, மயில், மான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் ஆன்லைன் லாட்டரிகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வத்தலகுண்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், நிலக்கோட்டை பூ மார்க்கெட், பள்ளிகள், மருத்துவமனைகள், டீக்கடை, பேக்கரி உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த லாட்டரிகளை ஆன்லைனில் மூலம் ரிசல்ட் பார்த்து உரியவர்களிடம் தெரியப்படுத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால், இந்த பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் லாட்டரி சீட்டுகளை வாங்கி வாழ்க்கையை சீரழித்து வருவதாக புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையிடம் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.
தற்போது, நிலக்கோட்டையில் அணைப்பட்டி சாலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.