Categories: தமிழகம்

விடிய விடிய நடந்த ஆடல் பாடல் : போலீசாரின் அனுமதியோடு களைகட்டிய நிகழ்ச்சி… நீதிமன்ற உத்தரவை மதிக்காத காவல்துறையால் சர்ச்சை!!

திருச்சி : நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு விடிய விடிய ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய காவல்துறை.

கோவில்களில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கோரி மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தாரணி முன்பு வந்தது. அப்போது அவர் கோவில் திருவிழாக்களில் ஆடல் மற்றும் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், கோவில்களில் திருவிழாக்கள் வழக்கம்போல நடைபெறலாம் என்றும், ஆனால் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர இயலாது என்றும் தெரிவித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஓரத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் தேர் திருவிழா கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில். கடந்த 16ஆம் தேதி மாரியம்மன் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஓரத்தூர் கிராமத் கோவில் திருவிழாவில் நேற்று இரவு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி போலீஸாரின் அனுமதியுடன் விடிய விடிய நடைபெற்றது.

குறிப்பாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு நிறைவடையும் ஆனால் நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி 10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.30 மணி வரை போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தாரணி அவர்களின் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விடும்படி ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்திய கோவில் நிர்வாகிகள் மீதும், பணம் பெற்றுக் கொண்டு அனுமதி கொடுத்த கல்லக்குடி காவல் நிலைய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்‌.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

23 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

23 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.