மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவையை முடக்குவதாக ஆளுநர் அறிவித்திருந்தார்.
அரசியலமைப்பு சட்டம் 174வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12 முதல் முடக்கி வைப்பதாக ஆளுநர் உத்தரவிட்டார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கியது விதிமுறை மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க ஆளுநர் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து ஆளுநர் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில், 11ம் தேதி மாலை மேற்கு வங்க சட்டப்பேரவை விவகாரங்கள் அமைச்சரவையில் இருந்து அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 2ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு கேட்டுக்கொண்டதாலயே சட்டப்பேரவையை முடித்து வைத்ததாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.