தமிழகம்

திருச்செந்தூர் கடலில் குளிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து? பக்தர்கள் பரபரப்பு புகார்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்க: பாமகவில் நடப்பது தந்தை மகன் பிரச்சனை.. கூட்டணி கட்சி என்பதால்.. வானதி சீனிவாசன் நெத்தியடி!

மேலும் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவிலுக்கு வரும் தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமியை வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடலில் பக்தர்கள் நீராடி கொண்டிருந்த போது உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோருக்கு அரிப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல் கை, கால் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் கூறினர்.

இதையடுத்து கடற்கரை பகுதியில் ஆய்வு செய்த பணியாளர்கள் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதை பார்த்துள்ளனர். இந்த ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு தோல் நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து ஜெல்லி மீன்களால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் கோவிலில் உள்ள மருத்துவமுகாமில் முதலுதவி சிகிச்சை பெற்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

இதுகுறித்து உரிய ஆய்வு செய்து ஜெல்லி மீன்களால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் போது மயங்கி விழுந்து மரணமடைந்த பக்தர் : அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது கங்கை அம்மன் திருவிழா, காவம்மா திருவிழா ஆகியவை போன்ற அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று…

19 minutes ago

எங்கயோ தப்பு நடந்திருக்கு;நான் அப்படி பண்ணவே இல்ல- கமல் விவகாரத்தில் சிவராஜ்குமார் ஓபன் டாக்!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மே மாதம் 24 ஆம் தேதி…

30 minutes ago

மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி தனக்கு தானே சூனியம்.. திமுக இனி 10 ஆண்டு ஆட்சிக்கு வராது!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, முதல்வர்…

40 minutes ago

பாதிக்கப்பட்ட மாணவி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி… ஞானசேகரனுக்கு ஆயுள் வழங்கியதற்கு ஜோதிமணி வரவேற்பு!

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் மாநகராட்சி குமரன் உயர்நிலைப் பள்ளியில் பாடநூல், சீருடைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட…

1 hour ago

தனது பிறந்தநாளில் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைக்கும் செய்தியைச் சொன்ன இளையராஜா? வேற லெவல்!

இசைஞானி அவதரித்த தினம் இசைஞானி என்று இசை ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜா இன்று தனது 82 ஆவது வயதில் அடி…

2 hours ago

SIRஐ காப்பாற்றியது யார் ? ஸ்டாலின் சாரே நினைத்தாலும் இனி காப்பாற்ற முடியாது : இபிஎஸ் பரபரப்பு ட்வீட்!!

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இது…

2 hours ago

This website uses cookies.