தமிழில் திரு திரு துரு துரு மற்றும் விண்னைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜனனி அய்யர், தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தெகிடி படத்திற்கு பிறகு அசோக் செல்வனுடன் இவர் நடித்துள்ள வேழம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நாயகன் அசோக் செல்வனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் இதில் பங்கேற்காத நிலையில். ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன், மற்றும் இயக்குநர் தயாரிப்பாளர்கள என பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனனி ஐயர் கூறுகையில், தெகிடி வேழம் என தலைப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. நல்ல திரைப்படங்களை ஆதரிக்க தமிழ் சினிமாவில் ஆட்கள் குறைவாக உள்ளனர். அப்படிப்பட்ட வேழம் படத்தை வெளியிட எஸ்பி சினிமா சார்பில் கிஷோர் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறிய அவர், திடீரென தனது பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இனிமேல் அனைவரும் தன்னை ஜனனி என்று அழைக்கவும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். பாலாவின் அவன் இவன் படம் வெளியான போது ஜனனி ஐயர் பெயரில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயர் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியதை தொடர்ந்துதற்போது ஜனனி ஐயர் என்ற பெயரில் இருந்த சமூகத்தின் வார்த்தையை நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
This website uses cookies.