தமிழகம்

என்னங்க இதுல எல்லாமே கிடைக்குது.. Grok AI என்றால் என்ன? பயன்பாடுகள் என்னென்ன?

Grok AI தனி செயலியாக அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது X தளத்திலும் தனி ஐகானாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து பயனர்களை குஷிப்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தின் Grok AI அசிஸ்டண்ட்டுக்கு பிரத்யேக செயலி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எக்ஸ் சமூக வலைத்தளத்துக்கு வெளியே இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் எலான் மஸ்கின் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், இந்த செயலியை எக்ஸ் ஏஐ (Xai) வடிவமைத்துள்ளது. பயனர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் உரையாடல் பாணியில் இந்தச் செயலி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் படங்களை உருவாக்கவும், தங்களது உரையைச் சுருக்கவும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும், chatgpt போன்று.

ஆனால், முன்னதாக, எக்ஸ் தளத்தில் ப்ரீமியம் சந்தாதாரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் Grok AI அறிமுகமானது. தற்போது எக்ஸின் ஏஐ அசிஸ்டண்ட்டை கட்டணமின்றி பயன்படுத்தலாம். இருப்பினும், இதில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 10 ரெக்வெஸ்ட், நாள் ஒன்றுக்கு மூன்று படங்கள் மட்டுமே பயனர்கள் பெற முடியும்.

இது செயலி வடிவில் பயன்படுத்தும் பயனர்களுக்கும் அடங்கும். இதனை ஆப்பிள், கூகுள், எக்ஸ் கணக்கு, மின்னஞ்சல் முகவரி என ஏதேனும் ஒரு பயனர் ஐடியைப் பயன்படுத்தி, இந்த செயலிக்குள் Login செய்து பயன்படுத்தலாம். தகவலின் துல்லியம் மற்றும் இமேஜ் அவுட்புட் என மற்ற ஏஐ தளங்கள் எதிர்கொண்டு வரும் சவாலை Grok AI-யும் எதிர்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!முக்கிய ஹீரோயினுடன் கேமியோ ரோலில் நடிக்கும் சமந்தா.!

இந்த நிலையில், புதிய பயன்பாட்டை எக்ஸ் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, ட்விட்டர் பயனர்கள் தங்கள் பதிவுகளின் பதில்களில் “@grok” என்று டேக் செய்து, எந்தக் கேள்வியையும் கேட்கலாம். க்ரோக் AI, பதிவின் சூழலை தானாகப் புரிந்துகொண்டு, மின்னல் வேகத்தில் பதிலளிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இது வெறும் டெக்ஸ்ட் பதில்களை மட்டுமல்ல, படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பதிலளித்து, ட்விட்டர் பயனர்களுக்கு ஒரு புதிய தகவல் ஹப்பாக மாறுகிறது. அது மட்டுமின்றி, Grok AI-க்கு தனி ஐகானும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமும் நாம் தேவையான தகவல்களைக் கேட்டுப் பெறலாம்.

Hariharasudhan R

Recent Posts

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

13 minutes ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

1 hour ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

2 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

2 hours ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

2 hours ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

2 hours ago

This website uses cookies.