Categories: தமிழகம்

கோவை அரசு சட்டக் கல்லூரி முதல்வர் மீது பரபரப்பு புகார்.. வீதியில் இறங்கிய மாணவர்களால் பரபரப்பு!!!

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மாணவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும். காரணம் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை திரும்ப கல்லூரியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

சட்டக் கல்லூரியில் ஹாரிதா என்ற மாணவி கல்லூரியில் சேரும் போது கொடுத்த டிசி காணவில்லை என்று கல்லூரி சார்பாக தெரிவித்து உள்ளனர் ‌.

இதையடுத்து மூன்றாம் ஆண்டு படித்துவரும் சேக் முகம்மது என்ற மாணவர் கல்லூரிக்கு சென்று கல்லூரி ஊழியர்களை தகாத வார்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் வடவள்ளி காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் ஷேக் முகமது மற்றும் ஹாரிதா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அதை தொடர்ந்து இருவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது. இரண்டாம் ஆண்டு பயின்று வரும் தரணிஸ் என்ற மாணவனை காரணம் இன்றி சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டிக்கும் விதமாகநேற்று சட்டக் கல்லூரி வளாகத்தில் முன்பு மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து விதமான சஸ்பெண்ட் ஆணையை திரும்ப பெற வேண்டும். மாணவர்கள் மீதான புகாரை விசாரிக்கும், ‘விசாரணை குழுவில்’ மாணவர்கள் சார்பாக மாணவர்கள் இருக்க வேண்டும்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் மீது இதைக் காரணம் காட்டி எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் இன்று இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.