தமிழகம்

LIC Website in Hindi; எதிர்ப்பும்.. காரணமும்!

எல்ஐசி இணையதளம் இந்தி மொழியில் மாறியது இன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.

கோயம்புத்தூர்: கடந்த மாதம் வரை ஆங்கில மொழியில் இருந்த LIC எனப்படும் இந்திய இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வலைத்தளம், இந்த மாதம் முதலே முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், மாற்று மொழிகளாக ஆங்கிலமும் மற்றும் மராத்தியும் மட்டுமே தரப்பட்டிருக்கிறது. அதேநேரம், ஆங்கிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றாலும், भाषा (மொழி என பொருள்படும் இந்தி சொல்) என்பதைத்தான் அழுத்த வேண்டும்.

ஆங்கில மொழிக்கு மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களா என ஒரு PoP UP நோட்டிஃபிகேஷன் வருகிறது. ஆனால், அதுவும் இந்தியில்தான் வருகிறது. ஆங்கில மொழியில் மாற்ற வேண்டுமா என்பதற்கு இந்தியிலும், இந்தி மொழியில் மாற்ற வேண்டுமா என்பதற்கு ஆங்கிலத்திலும் POP UP தந்திருக்கிறார்கள். இது எல்ஐசி முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “எல்ஐசி இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சாரக் கருவியாக மாற்றப்பட்டு விட்டது. ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது,இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழித் திணிப்பு தவிர வேறு ஒன்றும் இல்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்த ஒன்று. எனவே, இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்” எனத் தெரிவித்து உள்ளார்.

அதேபோல், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.

மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: சீமானின் ஆவேசப் பேச்சு தம்பிகளிடம் எடுபடவில்லையா? அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!

இவ்வாறு இருக்க, எல்ஐசி தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “இந்தியில் இணையதள முகப்பு பக்கம் உள்ளதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம். தற்போது அந்தக் கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது” என தனியார் தொலைக்காட்சிக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

14 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

14 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

14 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

15 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

16 hours ago

This website uses cookies.