தமிழகம்

திருப்பதி கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுவா? ஆட்சியர் முக்கிய தகவல்!

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் பக்தர்களும் உயிரிழந்தனர்.

திருப்பதி: உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் நாளை திறக்கப்பட உள்ளது. இதற்காக நாளை முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் வழியாகச் சென்று ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்காக சர்வ தரிசன டோக்கன்கள், நேற்று அதிகாலை முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, விஷ்ணு நிவாசம் உள்பட 8 இடங்களில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. இதன்படி, இலவச டோக்கன் பெற நேற்று மதியம் முதலே சுமார் ஒரு லட்சம் பேர் குவியத் தொடங்கினர்.

முக்கியமாக, திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பைராகி பட்டிடையில் அமைக்கப்பட்ட கவுன்டரில், பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்களும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் திணறினர்.

மேலும், ஒருவரை ஒருவர் முந்திச் செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது. எனவே, அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றனர். இதில், சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த மல்லிகா, கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த நிர்மலா உள்பட ஆந்திராவைச் சேர்ந்த ரஜினி, சாந்தி, ராஜேஸ்வரி மற்றும் நாயுடு பாபு ஆகியோரும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: ”உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ..” சீமான் சர்ச்சை பேச்சு.. வெடித்த அரசியல் பூகம்பம்!

இதன் முதற்கட்ட விசாரணையில், பிரதான நுழைவு வாயிலை திடீரென திறந்து விட்டதால் பக்தர்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டுக் கொண்டு உள்ளே சென்றதே விபத்துக்கான காரணம் என திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்வர் கூறியுள்ளார். அது மட்டுமின்றி, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கேட்டைத் திறந்து விட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

14 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

14 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

14 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

15 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

16 hours ago

This website uses cookies.