தமிழ்நாடு ஆளுநர் ரவி, நடிகர் ரஜினியிடம் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது என பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “நம்முடைய நாடு முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை பெருமிதமாக கொண்டாட தேசியக்கொடியை நம் இல்லங்களில் ஏற்றுகிறோம். ஜம்மு-காஷ்மீரில் நெய்யப்பட்ட தேசியக்கொடி வரவழைக்கப்பட்டு, பா.ஜ.க அலுவலகத்தில் ஏற்றப்படும்.
ஒரு சில தலைவர்கள் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுவதைக்கூட அரசியலாக்குகிறார்கள். அவர்களின் சிந்தனை எந்த அளவுக்கு பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும்.
தமிழ்நாட்டில் இருக்கிற முக்கியமான மனிதர்களில் ஒருவர் ரஜினிகாந்த. பல கோடி மக்களின் அன்பைப் பெற்றவர். தமிழ்நாட்டின் நலனுக்காக எப்போதும் குரல் கொடுத்து வருபவர். ஆளுநர் பல இடங்களில் பல மனிதர்களைச் சந்தித்து வருகிறார். ஆளுநர் ரவி, ரஜினியிடம் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. ஆளுநர் பலரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வருகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளும், தி.மு.க-வின் பி.டீமாகச் செயல்படுகிற, அந்தக் கட்சி கொடுக்கிற ஆக்ஸிஜனை வைத்துக்கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற சில கட்சித் தலைவர்கள் தங்களின் இருப்பைக் காட்டுவதற்காக ரஜினி அவர்களை விமர்சித்திருக்கிறார்கள். ரஜினி, `நான் அரசியல் பேசினேன்!’ என்று கூறுவது, சமுதாயத்தில் நடக்கக்கூடிய விசியங்களைக் குறித்துப் பேசினோம் என்றுதான் அர்த்தம்” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.