Categories: தமிழகம்

ஆன்லைனில் சாதி, வருவாய், இருப்பிட சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு இத சீக்கிரம் செய்யுங்க : அமைச்சரின் அதிரடி ஆர்டர்!!

தமிழகத்தில் 876 ஊராட்சிகளில் கிராம செயலகம் இந்தாண்டு கட்டப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், வருவாய் துறை செயல்பாடுகளை வேகப்படுத்தி, எளிமைப்படுத்த வேண்டும். தாலுகா, விஏஓ, ஆர்டிஓ அலுவலங்களில் பொதுமக்கள் சொல்லுகிற கோரிக்கைகளை குறிப்பிட்ட தினங்களுக்காக அலுவலர்கள் முடித்துக்கொடுக்க வேண்டும் என்கிற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கும், வேறு மாவட்டங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் வருவாய் துறையில் உள்ளது. டெல்டாவில் நில பிரச்சனை, குத்தகை பிரச்சனை, கோயில், மடத்து நிலங்கள் தொடர்பாக பிரச்சனைகள் அதிகம் உள்ளன.

கோயில் நிலங்களில் குடியிருப்போர்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்பது அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதை சட்டப்படி எப்படி கையாளுவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
இந்தாண்டுக்கான பயிர் காப்பீடு செலுத்தவதற்கான காலக்கெடு இம்மாதம் 30-ம் தேதியோடு முடிவடைய இருக்கிறது.

எனவே, விவசாயிகளுக்கு இன்னும் நான்கு தினங்களில் அவர்கள் கேட்கும் அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமங்களில் விஏஓ அலுவலகங்கள் வேண்டும் என பலதரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக ஊராட்சி மற்றும் வருவாய் துறை இணைந்து, தமிழகத்தில் முதற்கட்டமாக இந்தாண்டு கிராம செயலகம் என்ற பெயரில், 876 இடங்களில் ஊராட்சி அலுவலகங்கள், கூட்ட அரங்கம், விஏஓ அலுவலகங்களை என மூன்றும் சேர்த்து ஒரு கட்டிடத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களை தேர்வு செய்து கட்டிடம் கட்டப்படும்.

சாதி,வருவாய், இருப்பிட சான்றிதழை போன்றவற்றை வழங்க ஒரு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் விண்ணப்பம் செய்யும் நிலையில், அதை அலுவலர்கள் சரிபார்த்து குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள்ள வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

31 minutes ago

ஆர்யா மீது வரி ஏய்ப்பு புகார்? வருமான வரித்துறையினரின் திடீர் சோதனைக்கு காரணம் என்ன?

ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…

44 minutes ago

சினிமா மட்டுமல்ல… தொழிலிலும் மாஸ் காட்டும் ஆர்யா.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…

1 hour ago

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

17 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

17 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

18 hours ago

This website uses cookies.