பிரபல சென்னை ரவுடி பாம் சரவணன், ஆந்திராவில் பதுங்கி இருந்த நிலையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னை, புளியந்தோப்பு அடுத்த வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்பட 26 வழக்குகள் உள்ளன. இவற்றில் 3 கொலை வழக்குகளில் இவரை பிடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆனால், பாம் சரவணன் தலைமறைவானார். இந்த நிலையில், சென்னை போலீசார் பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து, சரவணனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சரவணன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து, சித்தூர் மாவட்டம், வரதப்பாளையம் பகுதியில் ரவுடி பாம் சரவணனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, சென்னையின் புறநகர் பகுதியில் ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு…. அமைச்சர் மீது நீலம் பண்பாடு மையம் பகீர் குற்றச்சாட்டு!!
மேலும், விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூலை 5ஆம் தேதி கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு பழிக்குப் பழியாக, ஆற்காடு சுரேஷ் தரப்பினரை கொலை செய்ய பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில், அவர் காவல் துறையால் சுட்டுப் பிடிக்கப்பட்டு உள்ளார்.
அதேநேரம், இந்த துப்பாக்கிச்சூடு, அவர் தப்ப முயன்ற போது காலில் சுடப்பட்டதாகவும், காவலர் ஒருவரும் இதில் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.