மர்மதேசம் என்ற நூல் முதல் தேசிய விருது வென்ற படம் வரை தனது எழுத்துக்களால் எழுத்துலகை கட்டி ஆண்ட இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்.
சென்னை: 1958ஆம் ஆண்டு பிறந்தவர் இந்திரா சௌந்தர்ராஜன். மதுரையில் வசித்து வந்த இவருடைய உண்மையான பெயர் சௌந்தர்ராஜன். பின்னாட்களில் எழுத்தின் மீது கொண்ட காதலால், தன்னுடைய தாயின் பெயரான ‘இந்திரா’வை தன் பெயருடன் சேர்த்து இந்திரா சௌந்தர்ராஜன் என்பதை தன் எழுத்துப் பெயராக மாற்றிக் கொண்டிருந்தார்.
முன்னதாக டிவிஎஸ் நிறுவனத்தில் துணைப் பொறியாளராக பணியாற்றிய இவர், தற்போதும் மதுரை டிவிஎஸ் நகர்ப் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 1978ஆம் ஆண்டு ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற கதைக்காக கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசை வென்றார். தொடர்ந்து, ‘என் பெயர் ரங்கநாயகி’ எனும் கதை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலிற்கான மூன்றாம் பரிசினையும் பெற்றது.
மேலும் இவர் புகழ்பெற்ற பல சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவற்றை எழுதி உள்ளார். இதன்படி, என் பெயர் ரங்கநாயகி மற்றும் மர்ம தேசம் ஆகிய படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. மேலும், அத்திப்பூக்கள் என்ற தொடர் இவரது எழுத்தில் வெளி வந்த அழியாத தொடர் ஆகும். இந்நிலையில்தான், நேற்று மதுரையில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்துள்ளார்.
66 வயதாகும் இந்திரா சௌந்தர்ராஜனின் திடீர் மறைவு எழுத்துலகிலும், திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு உரிய மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இதில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால், நவம்பர் 13ஆம் தேதி அவரது பிறந்தநாள் வரும் நிலையில், நவம்பர் 10ம் தேதியான இன்று, அதாவது இன்னும் 3 நாட்களில் 66வது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவர் மறைந்திருப்பது, பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி கணேஷின் கடைசி நிமிடங்கள்.. மகன் உணர்வுப்பூர்வ பகிர்வு!
இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில், ” “பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.