தமிழகம்

அந்த ‘சாரை’ காவல்துறை மறைக்கிறது.. இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் அடிப்படையில், ஞானசேகரன் போனில் சார் என அழைத்தது யார் என்பதை காவல்துறை இதுவரை வெளிப்படுத்தவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “உலக அளவிலே புகழ்பெற்ற பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு 7.45 மணியளவில், ஞானசேகரன் என்பவர் அத்துமீறி நுழைந்து, அந்த பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த மாணவன் மற்றும் மாணவியைப் பார்த்துள்ளார்.

அப்போது, அந்த மாணவனை அடித்து உதைத்து, அங்கிருந்த மாணவியை பலவந்தமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்தச் செயல்பாட்டை செல்போனில் ஞானசேகரன் படம்பிடித்ததாகவும், பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

பாலியல் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ஞானசேகரனுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் யாரிடமோ சார், சார் எனப் பேசியுள்ளார். அந்த சார் யார் என்பதை காவல்துறை இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்த விவரங்கள் அனைத்தும் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், காவல் உயர் அதிகாரி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது ஒருவர் தான். அவர் ஞானசேகரன் தான் என்கிறார். அப்படியெனில் போனில் சார், சார் என்று பேசியது யாரிடம்? அதுமட்டுமின்றி பல ஆயிரம் மாணவர்கள் படிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில், எப்படி அந்த நபர் சாதாரணமாக சுற்றித் திரிய முடிந்தது?

இதனால் பெற்றோர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். அந்த பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் 56 மட்டுமே இயங்குகின்றன, மற்றவை ஏன் இயங்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அரசு செயல்படுகிறதா? இந்த ஞானசேகரன் ஒரு சரித்தரப் பதிவேடு குற்றவாளி.

இதையும் படிங்க: அமைச்சருக்கும், ஆணையருக்கும் முரண்பாடு.. யாரைக் காப்பாற்ற திமுக முயற்சிக்கிறது? அண்ணாமலை கேள்வி!

இப்படிப்பட்ட நபர் தங்குதடையின்றி அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்று வரும் நிலையிலா வைத்திருப்பது?. மேலும், காவல்துறை ஆணையர், 100க்கு புகார் வந்தவுடன் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்கிறார். ஆனால், இன்று, அந்த துறையின் அமைச்சர் சொல்கிறார், 100க்கு புகார் வரவில்லை என்று.

காவல் நிலையத்திற்கு நேரில் வந்துதான் புகார் அளித்ததாக முரண்பட்ட தகவலை அமைச்சர் கூறியிருக்கிறார். எனவே, உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார். மேலும், இந்த முரண்பட்ட தகவல்களுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

18 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

20 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

20 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

20 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

21 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

22 hours ago

This website uses cookies.