தமிழகம்

கை கொடுத்த காங்கிரஸ்.. 15 ஆண்டுகளாக கைவிட்ட டெல்லி.. தலைநகரில் நடந்தது என்ன?

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பானமையைப் பெற்று வரும் நிலையில், காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை.

டெல்லி: 2025, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற 36 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். ஆனால், இந்தப் பெரும்பான்மயைத் தாண்டி பாஜக சென்று கொண்டிருக்கிறது.

இதன் மூலம், கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தற்போதைய நிலவரப்படி எதிர்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. அதேநேரம், தேசியக் கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையும் ஒரு இடங்களில் கூட வெல்ல முடியாத நிலையில் உள்ளது. என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் 2013:

2013, 2015, 2020 டெல்லி தேர்தல் களம்: ஏனென்றால், கடந்த 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் தேவை என்பதால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்து, காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சி அமைத்தது.

இதனையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றது. ஆனால், பாஜக வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதைவிடக் கொடுமையாக, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இதையும் படிங்க: வெங்காயத்தால் ஆட்சியை இழந்த பாஜக.. மதுவால் மீண்டும் டெல்லியை சாத்தியமாக்கியது எப்படி?

அதேபோல், 2020 சட்டமன்றத் தேர்தலிலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியே வெற்றியைப் பெற்றது. ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்ப்பு அலைகளைச் சமாளித்து 62 தொகுதிகளில் ஆம் ஆத்மியால் வெற்றி பெற முடிந்தது. அப்போது, பாஜக 8 தொகுதிகளில் வென்றது. ஆனால், அப்போதும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.