தமிழகம்

கை கொடுத்த காங்கிரஸ்.. 15 ஆண்டுகளாக கைவிட்ட டெல்லி.. தலைநகரில் நடந்தது என்ன?

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பானமையைப் பெற்று வரும் நிலையில், காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட முன்னிலை பெறவில்லை.

டெல்லி: 2025, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற 36 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். ஆனால், இந்தப் பெரும்பான்மயைத் தாண்டி பாஜக சென்று கொண்டிருக்கிறது.

இதன் மூலம், கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற ஆம் ஆத்மி தற்போதைய நிலவரப்படி எதிர்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. அதேநேரம், தேசியக் கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையும் ஒரு இடங்களில் கூட வெல்ல முடியாத நிலையில் உள்ளது. என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் 2013:

2013, 2015, 2020 டெல்லி தேர்தல் களம்: ஏனென்றால், கடந்த 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் தேவை என்பதால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்து, காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சி அமைத்தது.

இதனையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் மகத்தான வெற்றியைப் பெற்றது. ஆனால், பாஜக வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதைவிடக் கொடுமையாக, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இதையும் படிங்க: வெங்காயத்தால் ஆட்சியை இழந்த பாஜக.. மதுவால் மீண்டும் டெல்லியை சாத்தியமாக்கியது எப்படி?

அதேபோல், 2020 சட்டமன்றத் தேர்தலிலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியே வெற்றியைப் பெற்றது. ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்ப்பு அலைகளைச் சமாளித்து 62 தொகுதிகளில் ஆம் ஆத்மியால் வெற்றி பெற முடிந்தது. அப்போது, பாஜக 8 தொகுதிகளில் வென்றது. ஆனால், அப்போதும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை.. தேடிச் சென்ற வனத்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…

17 minutes ago

இனியும் இபிஎஸ் பற்றி இழிவு செய்தால்.. அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை!

தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…

36 minutes ago

மதுரை முருகன் மாநாட்டில் சூப்பர் ஸ்டார்? உறுதிப்படுத்திய ரஜினிகாந்த் தரப்பு?

மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…

1 hour ago

விரும்புகிற தெய்வங்களை அவரவர் வணங்குவது ஜனநாயக உரிமை.. முருகர் மாநாட்டுக்கு வாழ்த்துகள் : இபிஎஸ் அதிரடி!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…

2 hours ago

தலைவர் மாதிரி பேசுறதுக்கு இன்னும் பயிற்சி வேணும்? தனுஷை கண்டபடி கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…

கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…

2 hours ago

என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது, ஜெய் ஹனுமான் தெரியும் : நடிகை நமீதா பெருமிதம்!

11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…

2 hours ago

This website uses cookies.